www.gamblinginsider.ca

28 October 2015

வெந்தும் வேகாத சாவு..! -Mano Red



உடலுக்கு என்ன கவலை
அதுபாட்டுக்கு அது இருக்கும்
அதற்கு நிச்சயிக்கப்பட்ட
மரணம் வரும்வரை !

மரணத்தின் போது
துணைக்கு யாரை
அழைக்க முடியும்.
நமக்கான மரணத்தை
நாம்தான் சந்தித்தாக வேண்டும்.

மூச்சை அடக்கி
அத்தனையும் ஒடுக்கி
மரணமடைந்தது போல
மல்லாந்து பாருங்கள்
உண்மைநிலை புரியும்.

இறந்த பின்
சுடுகாடு சேர்ந்தால்
உடல் அழிந்துவிடுமா.?
நிச்சயமாக அழியாது
நான் எனும் ஆணவம்
இருக்கும் வரை.

நான் நான் என்று
பொங்கியெழும்
ஆவேசப் பூரிப்பு
இந்த உடலை
எரிக்கவோ
புதைக்கவோ விடாது.

நான் எனும்
இப் பெரும் பூதமே
வாழ்நாள் முழுக்க 
உடலெனும் கூட்டை
ஆட்டி வைக்கிறது..

நான் எனும் பேருணர்வை
போர்த்தி நிற்கும்
எண்ணங்கள செயல்கள் நினைவுகள் 
இவை அத்தனையும்
அழியும் வரை
மரணம் என்பது
வெந்தும் வேகாத நிலையே.!