www.gamblinginsider.ca

30 November 2012

புதிய மனிதா பூமிக்கு வா..!!


http://eluthu.com/kavithai/95015.html

என்றோ ஒருநாள் நடக்கும் 
நீ கண்ட கனவுகள்..!!! 

வாழ்க்கையின் தூரங்களை, 
சுடு பால் கண்டு அஞ்சி நிற்கும் 
பூனை போல் அல்லாமல், 
பாய்ந்து கடக்க துடி..!!! 

எத்தனை துயரங்கள் தேடி வந்தாலும் 
அதை தலை குனிந்து ஏற்று கொள், 
உனக்கு வாய்க்க பெற்ற வரமாக..!!! 

எதிரிகள் உன்னை சாபமிட்டு 
அழிக்க பார்க்கலாம், 
நிமிடங்கள் உன்னை விட்டு 
கடந்து போகலாம், 
வாய்ப்புகள் வாசல் வரை வந்து 
கையசைத்து செல்லலாம், 

எது நடந்தாலும் உனக்கென்ன என்று 
அமுக்கி வைத்த ஆலமர விதையாய் இரு..! 
ஒருநாள் நீயும் வருவாய்..!!! 

உன்னை மிரட்டிய வரிகள் 
ஒருநாள் உன் அடி பணியும், 
உனக்கு ஆறுதல் தந்த வார்த்தைகள் 
உன்னால் பெருமை கொள்ளும். 

நீ ஏறிகொண்டிருக்கும் ஏணியை, 
யார் வேண்டுமானாலும் உடைக்கலாம்.. 
பயப்படாதே..!! 

உலகின் கடைசி சென்றாவது, 
உனக்கென ஒரு பாதை போட்டால் 
உன் பின்னால் வருவார்கள் 
ஏணியை உடைத்தவர்கள் ..!! 

வாழ்வதற்கு நாட்களை எண்ணாமல், 
சாவதற்கு நீ துணிந்து விட்டால் 
விதி கூட உன்னை தொட மறுக்கும்..!!! 

புதிய மனிதா 
உனது பூமிக்கு வா..!!! 
உனக்காக வரலாற்றின் பக்கங்கள் 
காத்துக் கொண்டிருக்கின்றன, 
உன் பெயரை சுமப்பதற்கு...!!


ஆயிரத்தில் ஒருவன்..!!!!


நான் ஆயிரத்தில் ஒருவன் ஆகிறேன்,
பேருந்தில் ஒரு தாய்-தான்
அமர இடம் கேட்டு கேட்டு ஏமாந்து,
அதை நான் தந்த போது...!!!!!

29 November 2012

கண்ணீர் விட்ட வானம்...!!!

சிரித்து கொண்டிருந்த நீ,
சோகத்தில் மூழ்கியவுடன்....
சிரிக்க மட்டுமே தெரிந்த என் வானம்,
அழ தொடங்கியது
உன் கண்ணீர் துளிகளை கரைப்பதற்காக..!!!!

முரண்பாடு..!!!


பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி
என போராட்டம் நடத்திவிட்டு,
பாலிதீன் உடை அணிந்த-அந்த
மரக்கன்றுகளை மகிழ்ச்சியுடன் புதைக்கிறார்கள்,
இந்த மண்ணின் மைந்தர்கள்..??

28 November 2012

சிவப்பு ...!!!!


இந்த வார்த்தையில் என்னவோ இருக்கிறது, 
வண்ணத்தில் தனிமையாகவும் 
சாலையில் அபாயமகவும் 
வறுமையின் முகவரியாகவும் 
புரட்சியின் அடையாளமாகவும் 
இன்பத்தில் விளக்காகவும் 
உனக்கு இத்தனை முகங்களா??


பேஸ்புக்..?


http://eluthu.com/kavithai/93552.html

முகம் தெரியாத "அவனை" 
"அவள்"என்று நினைத்து 
காதல் சொல்ல வைத்த 
விஞ்ஞான திருடன்...!

ஆற்றில் போடப்படும் தர்மங்கள்...!!!!


http://eluthu.com/kavithai/94625.html

கை கட்டி நிற்பவனுக்கு கோடிகளையும், 
கையேந்தி கேட்டவனுக்கு கோவத்தையும் 
அள்ளி அள்ளி கொடுக்கும் ஆச்சரியமானவர்களே..!! 

ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடுவேன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உள்ளங்களே..!!! 

இறைவனுக்கு 
வறுமை இல்லை, 
பசியும் இல்லை, 
எனவே பணமும் தேவை இல்லை..!! 

ஆற்றில் போடுவதே தவறு-இதில் 
அளந்து தான் போட்டேன் என்று சொன்னால் 
என்னவென்று கருதுவது...???? 

இல்லாதவர்க்கு அள்ளி கொடுங்கள் 
சிவந்த உன் கைகளை காண 
இறைவனும் இறங்கி வருவான்..!!!

தொலைந்து போன கடிதங்கள்...???


http://eluthu.com/kavithai/94506.html

அன்புள்ள என ஆரம்பித்து 
நலம் நலமறிய ஆவல்...!!! 
என மகனுக்கு கடிதம் எழுத தொடங்கும் போதே 
இனமறியா சந்தோசம் தாயின் மனதில்.. 

நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் 
உன் உடம்பை பார்த்துகொள்.. 
நல்லா சாப்பிடு,, 
எங்கள பத்தி கவலை வேண்டாம்.. 

இந்த வருடம் நல்ல மழை 
செடிகள் நல்லா வளர்ந்துருக்கு.. 
நீ அனுப்பிச்ச பணத்துல தான் 
உரம் வாங்கி விதச்சோம் 

ஆடு ஒரு குட்டி போட்டுள்ளது 
உன் பெயர் தான் குட்டிக்கு வச்சுருக்கோம் 
நல்லா வெள்ளையா அழகா இருக்கு. 
நீ வரும் போது பெரிசாயிடும்..!! 

இந்த வருடம் ஊர்ல திருவிழா, 
மதுரை கரகாட்டம் வருது 
உனக்கு புடிச்ச ரெகார்ட் டான்ஸ் 
நிகழ்ச்சி கூட போடுறாங்க..!! 

அப்புறம் பாப்பா இந்த வருடம் 
பத்தாவது வகுப்புக்கு போறா, 
புத்தகம் வாங்க அடுத்த முறை 
சேர்த்து பணம் அனுப்பி விடு... 

இப்படிக்கு உன்னை காணமல் 
தினமும் வாடிக்கொண்டிருக்கும் 
அம்மாவும்,அப்பாவும்.. 

இப்படி குலைந்து குலைந்து 
கடிதம் எழுதிய காலம் 
தொழில்நுட்ப வளர்ச்சியில் 
தொலைந்து தொங்கி நிற்கிறது... 

தபால் பெட்டியின் நினைவுகளை 
அழிக்க வந்த நவீன கொலைகாரனாக, 
"குறுந்தகவல்"மட்டும் விரல்களில்...???


என்னை விட்டு விடு...!!!


http://eluthu.com/kavithai/94747.html


விழிகளிலே உன் நினைவுகளை, 
புதைப்பது போல் உணருகிறேன். 

உனை மறக்க 
உன் நினைவிழக்க 
இறப்பதற்கு துணிகிறேன். 

வேண்டாம் கொடுமை, 
மின்னலே என்னை விட்டு விடு....!! 

உன்னை நான் வர்ணித்த வரிகளை 
திருப்பி தந்து விடு..., 
என் தேவதையே, 
முன் பனித்துளியே, 
வானவில்லே, 
வால் நட்சத்திரமே..!!! 

என் இதய துடிப்பையும் 
உனக்கு கடன் தருகிறேன் 
என்னை தொலைத்து விடு...!! 

உன்னை விட்டு 
போக துணிந்த எனக்கு, 
நீ தந்த சுவடுகள் 

ஆணியறைந்த இதயம், 
நசுக்கப்பட்ட பூக்கள், 
கண்ணீர் விட்ட கடிதங்கள், 
மரித்துப்போன மணித்துளிகள்...!!! 

நான் போகிறேன் அன்பே 
இரவுகளை தேடி அல்ல, 
நீ இல்லாத பகலை...!!!!

24 November 2012

வெள்ளை காகிதம்..!!!


http://eluthu.com/kavithai/93973.html

பள்ளி சென்று படிக்கும் 
பதின்மூன்று வயது பூவுக்கு, 
இரும்பினால் காப்பு செய்து 
திருமணம் முடித்தனர்-அவளை 
பெற்றதாய் பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள்.. 

திருமண பந்தம் தொடங்கும் முன்பே, 
கணவரை எமனுக்கு விற்று விட்டாள் 
நோயின் காரணமாக..,,,, 

விளையாடிகொண்டிருந்த அவளிடம் 
பூவும் பொட்டும் சண்டையிட்டு பிரிந்தது...?? 
வெள்ளை உடை தோழியானது...!!! 

எதுவும் புரியாமல், 
சொல்லவும் முடியாமல், 
என்னவென்றே தெரியாமல், 
அந்த மழலை பூ திணறியது. 

முள் வேலிக்குள் முடங்கிய பூவை, 
வார்த்தை தீயினால் சுட்டார்கள், 
நான்கு விதமாய் பேசும் அந்த நால்வர்கள்...!! 

என்ன வரம் வங்கி வந்தாளோ, 
இப்படி ஒரு வாழ்க்கை-என 
ஊர் பெரிசுகள் ஒப்பாரி வைக்க, 
வரம் கொடுத்தவன் வேடிக்கை பார்த்திருந்தான்..??


யாரு செய்த பாவமோ..??? 
எனக்கு மகளாக வந்தாய்-என 
தாய் தன் புலம்பல் விதைகளை, 
ஆழமாய் விதைத்தாள்,,..!! 

விளையாட வராமல் உனக்கு 
என்னடி பெரிய வேலை..??? 
இனிமேல் உன்னுடன் பேசமாட்டோம்-என 
சிறு தோழிகள் கோவமாய் தோலுரித்தனர்..!! 

சோகம் புடைசூழ வந்த மாமியார், 
என் மகனை கொல்ல வந்த பாவி, 
நீ நாசமாய் போவாய் என 
தன் பங்கு உரையை சிறப்பாக முடித்தாள்...!! 

சிலையாக உருகி நின்ற அவளை, 
நிலவு மட்டுமே ஆறுதலாக பார்த்தது. 
இவளும் என்னை போலவே 
ஒன்றும் எழுதப்படாத "வெள்ளை காகிதம்" 
யாரும் கிழித்து விடாதீர்கள்....!!!

மர்ம காய்ச்சல்...???


http://eluthu.com/kavithai/94006.html

காலை மூன்று மணிக்கு 
தூக்கம் கலைந்தேன். 
திடிரென எழுந்து 
சற்று தூரம் நடந்தேன். 

எங்கேயோ பார்த்து 
தனியாக சிரித்தேன். 
யாரோ அழைப்பதாக 
நினைத்து ஓடினேன். 

பல் துலக்க நினைத்து 
சாப்பிட சென்றேன். 
சாப்பிட்டதாக உணர்ந்து 
குளித்தும் விட்டேன். 

சட்டை அணியாமல் 
பஸ்ஸில் சென்றேன். 
எங்கோ சென்று பாதி வழியில் 
திரும்பி வந்தேன். 

எண்களை பதிக்காமல் 
தொலைபேசியில் பேசினேன். 
மழை பெய்வதாக எண்ணி 
வெயிலில் நனைந்தேன். 

மணிக்கு ஒருமுறை 
கண்ணாடியை கண் கலங்க வைத்தேன். 
தலை சீவிச் சீவி 
சீப்பை தற்கொலைக்கு தூண்டினேன். 

இதெல்லாம் எதற்கு என்று புரியாமல், 
செய்வினை என தாய் அர்த்தம் கொண்டு 
சாமியாரிடம் கைதியானேன். 

தெய்வத்திடம் கேட்டு குறி சொன்ன சாமியார் 
இது செய்வினை அல்ல செயப்பாட்டு வினை 
இவனுக்கு மர்ம காய்ச்சல் என தீர்ப்பு எழுதினான். 

யாருக்கும் தெரியாது 
இது காதல் பேயின் சதி என்று....!!!

கானல் நீர்..!!!


http://eluthu.com/kavithai/94222.html

ஓடிபிடித்து விளையாடிய 
பள்ளி பருவத்தில், 
மிட்டாய் விற்க வந்த 
பெட்டிக்கடை தாத்தா..!!! 

திருவிழா காலத்தில் 
பலூன் கொண்டு வந்த 
தொப்பி மாமா...!! 

வீதிகளில் பால்,தயிர் 
தினமும் விற்க வந்த 
பெரிய கம்மல் ஆயா..!! 

வீடு தேடி வந்து 
கையை பிடித்தாலும், 
யாரும் ஒன்றும் சொல்ல முடியாத 
வளையல் விற்க வந்த அண்ணாச்சி..!! 

தெருதெருவாய் அலைந்தாலும் 
எப்போதும் புன்னகை மாறாமல், 
கலர் கலராக ஐஸ் கொடுத்த 
சைக்கிள் அண்ணன்...!! 

என எப்போதோ பார்த்த 
முகங்கள் உறவுகளாய் மனதில் நிற்க..,, 

சொந்த உறவுகள் மட்டும் 
கானல் நீராகி விட்டது..?? 
யாருக்கும் தாகம் தீர்க்காமல்..!!