ஒருமுறை பிறந்தே
ஒன்றும் கிழிக்காத போது
மறுபடி பிறக்காமலிருக்க
மறுபிறவி வேணடாமாம்..!!
முட்டாள் தனமான
வீண் வேண்டுதல்களை
என்ன சொல்ல. ??
கட்டுக்கட்டாக பணத்தில்
காணிக்கை செய்தால்
சொர்க்க வழி திறக்குமாம்..!!
முக்தி மோட்சம் பெற
மனித நேயம் இல்லாமல்
இறைவனிடம் நல்லவனாய்
முகச்சாயம் பூசினால் போதுமா..??
உங்களின்
நியாய தர்மங்களின்படி
கொடுக்கவும் வாங்கவும்
இறைவன் ஒன்றும்
சாதாரணமானவன் அல்லவே..!!
அப்படியிருக்க
நினைத்தது நடந்தால் துட்டு
இல்லையென்றால் திட்டா..??
தேங்காய் மட்டும்
உண்ணத் தகாத
பொருளாக இருந்திருந்தால்,
இறைவனிடம் வேண்டுதல்கள்
அதிகம் இருந்திருக்காது...!!
மனிதனின் ஆசைகளே
இங்கே பிரார்த்தனைகளை
தீர்மானிக்கின்றன..!!
இப்போதெல்லாம்.
இறைவன் பெயர் சொல்லி
வரமும் தரலாம்,
வரம்பும் மீறலாம்..!!
புது வேண்டுதல்களின்
மெருகேற்றப்பட்ட வடிவத்திலே
போலிச் சாமிகள் பிறக்கின்றன..!!
எல்லாமே அவன் செயல்
என்று இங்கிருக்க,
சாமிக்கே அலங்காரம்,
சாமிக்கே பூஜை ,
இறுதியில்
சாமி பெயரில் ஒரு அர்ச்சனை..!!
இங்கே கதை முடிந்தது
இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும்
இறைவனுக்கும்.....