www.gamblinginsider.ca

18 December 2012

என்னை தேடி வந்த பட்டாம்பூச்சி....!!!



கருப்பு,வெள்ளையாய் இருந்த
என் வாழ்க்கையின் பக்கங்களுக்கு,
வண்ணங்களை தெளிக்க
பட்டாம்பூச்சியாய் வந்தாள் அவள்..!!!

ஒருவேளை முன்ஜென்ம பந்தமோ.??
பார்த்தவுடன் என் கைகளில்
வந்து அமர்ந்து வண்ணம் பூசியது அந்த
பட்டாம்பூச்சி...!!

எல்லோருக்கும் இது கிடைக்குமா??
அவளின் சின்ன இதயத்தில்
எனக்கு மட்டும் அவ்வளவு பெரிய இடம்...!!

யார் செய்த சூழ்ச்சியோ..??
சந்தித்த மறுகணமே,
என் பட்டாம்பூச்சியை பிரிய வேண்டிய
சபிக்கப்பட்ட நேரம்..!!!

பார்க்காமலே எங்கள் உறவு வளர்ந்தது போல,
என்னை பார்த்தவுடன் பட்டாம்பூச்சிக்கு
இன்னும் சில வண்ணங்கள் பிறக்கும் என
என் மூடநம்பிக்கையும் கூடவே வளர்ந்திருந்தது...!!

என் பின்னே என் நிழல்
வருமா என்று தெரியாது.??
என் பட்டாம்பூச்சியின் நினைவுகளும்,
வண்ணங்களும் என்னுடன் வரும்
நிழலாக அல்ல உயிராக..!!

எனக்கு ஆறுதல் தர வந்த அவளுக்கு,
நான் ஆறுதல் சொன்ன நிமிடங்களே அதிகம்..!!

சிறு இதயம் தானே அவளுக்கு,
இதய துடிப்பின் சின்ன வலியையும்
தனக்குள் மறைக்க தெரியாத
குழந்தை அவள்...!!!

குறும்புகளின் ராணி என் பட்டாம்பூச்சி,
எப்போதும் விளையாடி கொண்டே இருப்பாள்
யார் சொன்னார்களோ பொய் அழகென்று,
நிறைய பொய்களை உண்மையாக சொல்வாள்..!!

அவளுக்கு பல நிறங்கள் போல பல முகங்கள்..
எப்போதும் புன்னகை செய்வாள்,
சட்டென கோவப்படுவாள்,
கோவத்தில் முகம் சிவந்து
புது வண்ணம் பிறக்கும் போது,
தன் கண்ணீர் வைத்தே வண்ணம் அழித்து விட்டு
மீண்டும் சிரிப்பாள்...!!

கண்ணாடி தானே என் பட்டாம்பூச்சி..!!
சிறு தூசியும் அவளை,
நூறு பிம்பங்களாக உடைத்து விடும்..!!

தேவதையின் நகல் என் பட்டாம்பூச்சி..!!!
நிலவும் பார்க்க ஆசைப்படும்,
பூக்கள் தினம் ஒற்றை காலில் நிற்கும்,
இன்னும் அவளை பற்றி
சொல்லிக்கொண்டே போகலாம்..!

எதுவும் பிடிக்காத அவளுக்கு,
எனக்கு பிடித்த சிலவற்றை
தனக்கும் பிடிக்கும் என சொல்லி
என்னையே வென்று விட்டாள்..!!!

என் பட்டாம்பூச்சியை,
பார்த்தவுடன் வியந்தேன் அச்சோ...!
வியப்பில் நின்றது என் மூச்சோ..!!
இப்போது அழகாய் மாறியது என் பேச்சோ...!!!

இதுபோதும்,
இப்போது நானும் பறக்கிறேன்,
இன்னும் பறப்பேன்..!!
தனியாக அல்ல,
என்னை தேடி வந்த என் பட்டாம்பூச்சியுடன்..!!