www.gamblinginsider.ca

31 May 2013

காதல் என்பது கவிதை அல்ல கலவரம்...!!!

பெண்ணே பெண்ணே மறைந்து விடு, 
என் இதயத்தை திருப்பி கொடு, 
கண்ணே கண்ணே தொலைத்து விடு, 
அவள் நினைவினை அழித்து விடு..!! 
என் இதயம் தின்ற பின்பு தான் 
காதல் வெறுப்பதா..?? 
நான் இறங்கியே வந்தாலும் 
பணிய மறுப்பதா..?? 

29 May 2013

உன்னைப்பற்றி தெரிந்து கொள்..!!!

எத்தனையோ கனவுகள், 
எண்ண முடியாத லட்சியங்கள், 
உன்னால் எதையும் செய்ய முடியும்- 
என்ற குருட்டு நம்பிக்கையில் 
கல்லூரி வாழ்க்கை..!! 

28 May 2013

காதல் எந்திரன்...!!

மழை சிதறும் மாலை நேரம், 
காதல் வந்தது ஓர விழியோரம், 
கையிலிருந்து அவள் வானம் தூரம், 
மெதுவாய் என் மனம் நகரும்..!! 

27 May 2013

இனி ஒரு உதவி செய்வோம்...!!!


அன்றைய தினம் மகிழ்ச்சி என 
நாட்காட்டியில் ராசிபலன் பார்த்துவிட்டு 
தொடங்கும் போதே பல சிக்கல்கள்..!! 
பேருந்து நெரிசலில் ஆரம்பித்து 
ஏகப்பட்ட இன்னல்கள் தாண்டி 
ராசிபலனை பொய் என்று நம்பி 
கடவுளை திட்ட ஆரம்பிக்கும் போது..... 

25 May 2013

அய்யய்யோ இதை படிக்காதீங்க...!!!


நாம் ஒன்று நினைக்க, 
தெய்வம் ஒன்று நினைத்தால், 
நாம் ஏன் நினைக்க வேண்டும்...?? 
நம்மை படைப்பது அவனென்றாலும் 
அவன் நினைத்தவாறே நாம் நடப்பதற்கு 
அவன் படைப்பில் அர்த்தமில்லை..?? 

24 May 2013

அவளை தேடி தொலையும் நான்...!!!


உன்னை தேடி தேடி எங்கோ அலைந்தேன், 
தேடி பார்த்து தோற்று போனால் 
என் உலகம் அழிப்பேன்...!! 
நீ வானம் பறக்க 
நான் மேகம் திறப்பேன், 
என் பாதம் வலிக்க 
உன்னை தூக்கி சுமப்பேன்..!! 
சிரித்தாலும் அழுதாலும் ரசிப்பேன், 
வெறுத்தாலும் அடித்தாலும் பொறுப்பேன்..!! 

23 May 2013

ஒரே கதாநாயகன்(அப்பா)....!!


நமக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து 
தேர்வு செய்து தரும் அப்பாவுக்குள் தான் 
எத்தனை கதாபத்திரங்கள்...!! 

தலையில் எண்ணையிட்டு வழித்து சீவி, 
கண்ணாடியை முறைத்து பார்த்து, 
மீசை முறுக்கி நடக்கும் போது, 
அப்பா- கதாநாயகன்..!! 

22 May 2013

இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...!!


மனிதன் தோன்றிய காலம் இருந்தே 
ஆணுக்கு பெண் அடிமை, 
என்ற ஆதிக்கத்தை காதல் வென்றது 
ஆண் பெண்ணுக்கு அடிமையான போது..!! 

20 May 2013

நண்பனின் நாட்குறிப்புகள்...!!!


விடிந்தும் விடியாத காலை நேரம், 
தூக்கத்தை தின்று கொண்டிருந்தது 
என் பொல்லாத கனவு..!! 
கனவில் நான் இறப்பது போலவும் 
அதை பார்த்து என் நண்பனும் இறப்பதாய் 

17 May 2013

கனா காணாத காலங்கள்..!!!


கனவுகள் தொலைத்து நானும் தொலைந்து 
உண்மை காதல் கொண்டேனே, 
என் தூக்கம் தொலைத்து 
கனவை தேடி பேயாய் அலைந்தேனே..!! 
கனவு காண்பது நிஜம் இல்லையே, 
நிஜமாய் நீ வந்தால் அது கனவே இல்லையே..!! 

அ...இ...உ...எ...ஒ...!!!


அதிகமான அன்புக்கு, 
அளவின்றி அடிமையாவதே, 
அன்புக்கு அடிமை..!! 

15 May 2013

மெட்ராஸ் கவிஞன்...!!!(தில்லிருந்தா லவ்வுங்க)



நான் இன்னா சொல்ல வரேன்னு 
மனசுல நல்லா ஏத்திகோங்க பா..! 
அப்பால புரியும் இன்னாத்துக்கு 
இவன் இப்படி சொன்னான்னு...!! 

அப்புடி தான் ஒரு நாளு 
நல்ல சொக்கா போட்டுகினு, 
பாத்தவுடனே பிகுலு விடுற மாதிரி, 
இப்பிடிகா என் வூட்டாண்ட வழியா 
போனா அந்த செம பிகரு..!! 

14 May 2013

இரட்டை கிளவியுடன் என் வாழ்க்கை..!!


மினுமினுக்கும் மின்னல் மனம், 
பளபளக்கும் பச்சை நினைவு, 
கலகலவென கலங்கமின்றிய புன்னகை, 
ஜிலுஜிலுவென மகிழ்வாய் அப்போது திகழ்ந்தேன்..!

சிடுசிடுவென கோவம் தலைக்கேறும், 
கரகரக்கும் குரலாய் பேச்சும் மாறும், 
படபடவென பொரிந்து புகைந்து 
கிடுகிடுவென என்னை தாழ்த்தி கொண்டேன்..!! 

13 May 2013

நீயின்றி நானில்லை...!!!


என்னை விட்டு பிரியாத உன் நினைவு 
நீ எங்கு சென்றாலும் உன்னுடனே 
கண்மூடி தனமாக வரும்..!! 

உன்னுடைய அளவில்லா காதலும் 
எனக்கு கோபமூட்டும், 
வேறு ஒருவருக்கு நீ காட்டும் போது..!! 

11 May 2013

மதிப்பெண் இல்லையெனில் மரணமா..???


பிறக்கும் போதே என்னவாக வேண்டுமென 
தந்தை தீர்மானிக்கும் போதே, 
குழந்தைகளின் பள்ளிகூட போராட்ட 
வாழ்க்கை ஆரம்பமாகிறது..!! 

10 May 2013

அறிவியல் வியக்கும் அழகி...!!!


மரபு சார்ந்த கோட்பாடுகளின் 
விதிகளை மீறியது நான் படைத்த 
அவளின் அழகு...!! 

இயற்கைக்கு ஒவ்வாத 
இலக்கணங்கள் பல கொண்டு 
இயற்றிய பௌதீக அழகி அவள்..!! 

09 May 2013

சில நேரங்களில் பல மாற்றங்கள்...!!!


நீண்ட இடைவெளிக்கு பிறகு 
உன்னை பார்த்த போது 
உன்னில் பல மாற்றங்கள்..!! 
உனக்கும் உனக்குமே பொருந்தாத 
புதுப்புது திருப்பங்கள்..!! 

08 May 2013

கிழிந்தது கவிதை மட்டுமல்ல..???


கண்ணாடி நெஞ்சே கண்ணாடி நெஞ்சே, 
கல் வீசி போனவள் யாரோ..?? 
முன்னாடி வந்து முள் வீசி கொன்று 
முகம் மறைத்து போனவள் யாரோ..?? 
கலப்படம் இல்ல காதலொன்றை 
கல்லறை வரை தருவேனே..!! 
கடல் விட்டு சென்ற மிச்ச அலை கொண்டு 
உன்னுயிர் கோர்த்து தருவேனே..!! 

03 May 2013

எழுதுகோல்(பேனா) காதலன்...!!!


பேனா..!! 
எழுதப்படிக்க தொடங்கிய போதே 
ஆறாம் விரலாய் முளைத்து விடும் 
உயிருள்ள தோழன்..!! 

பேனா..!! 
எழுத்துக்களையும் வரிகளையும் 
தின்று தின்று கொழுப்பில்லாமல் 
மெலிந்தே இருக்கும்.. 

01 May 2013

நான் கடவுள்...!!!



பகுத்தறிவற்ற பார்வை கோளாறிலே 
கண்ணில் தோன்றியன எல்லாம் 
பயத்தில் கடவுளாகி, 
மனித மூளையின் ஓர் மூலையில் 
மூடநம்பிக்கை வேரூன்றியது..!!!