www.gamblinginsider.ca

08 August 2019

பந்தியில் செய்யக் கூடாதவை

பந்தியில் செய்யக் கூடாதவை
-
இலை கழுவாமலே கூட்டு, பொறியல் வைத்திருப்பது கண்டு ஆரம்பத்திலேயே அதிரக் கூடாது.
'இலையில் ஸ்வீட் எங்கே?' எனத் தேடக் கூடாது.
எல்லாம் வைத்த பிறகு இறுதியாக வரும் ஸ்வீட் கண்டு எரிச்சலடையக் கூடாது.
வேண்டாம் என்று சொன்னாலும் இலையை நிரப்பிச் செல்வதை  எதிர்க்கக் கூடாது.
தெறித்து பக்கத்து இலையில் விழுவதுபோல் அப்பளம் நொறுக்கக் கூடாது.
தூரத்தில் சோறு பரிமாறுபவரை அழைத்து ரசம் கேட்டால் அவர் மோர் ஊற்றுகிறவரைக் கை காட்டுவார். மோர் ஊற்றுகிறவர் ரசத்தை அழைப்பதோடு மட்டும் நின்றுவிட்டு பாயாசத்துடன் வந்து நின்றால் கோபிக்கக் கூடாது.
அடுத்து உட்காருபவர் பின்னால் நின்றபடி உரசிக்கொண்டே இருக்கும்போது முருங்கைக்காய் சுவைக்கக் கூடாது.
500ml வாட்டர் கேனில் பாதி மிச்சமாகி வீணாகிறதே என வருந்தக் கூடாது.
எல்லாக் கோபத்தையும் குழாயைத் திருகுவதில் காட்டி அருகில் இருப்பவர் நனையுமளவுக்கு கை கழுவக் கூடாது.

மாதர் சங்க கலாசாரம்

எப்போதும் வெப்ப வடிவாகச் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு பேச ஒன்றுமில்லையெனில் ‘ஓ... அடிமைப்படுத்தும் ஆணினமே’ என்ற ஓலத்துடன் ஒட்டுமொத்த ஆண்களையும் நோக்கிப் பொங்கிப் பாய்கிறார்கள். இந்த மாதிரியான மாதர் சங்க கலாசாரம் தலையின் ஒரு மூலைப் பகுதியின் போஷாக்கு குறையைக் காட்டுகிறது. ‘மனிதி வெளியே வா’, ‘சிங்கப் பெண்ணே’ போன்ற பாடல்களை ஆண்களே எழுதி, ஆண்களை இசையமைத்து, ஆண்களே பாடிக் காட்டும் போது இன்ப மழையில் முழுதாக நனையும் நீங்கள் பிறகு இதுபோல் குற்றச்சாட்டுக் குடை பிடிப்பது உங்களுக்கே அடுக்குமா? சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரே நின்ற கோலத்தில் அருள் பாலிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் ஏன் இன்னும் ஆண்களின் அடி மன உணர்வு மீது கால் நீட்டி அமர்ந்து இருக்கிறீர்கள்? எங்கள் நெஞ்சின் ஈரப்பதத்தை கொஞ்சமாவது உணரலாமே.
கபம் 🙏