www.gamblinginsider.ca

31 August 2013

கண்ணீர் அஞ்சலி...!!!

கனக்கிறது இதயம், 
கொதிக்கிறது இரத்தம், 
உதவி என்றதும் உதறி விட்டு 
போகிற போக்கில் 
போகும் மாமனிதர்களை 
பார்க்கும் போதெல்லாம் 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!! 

பசியில் துடிப்பவன் 
சாலையில் தவிப்பவன் 
உதவிக்கு அலைபவன் 
இவர்களை கோமாளியாக்கி 
பேருந்து வரும் வரை 
நேரம் போக ரசிக்கும் 
(அ)நியாய மனிதர்களுக்கே 
முதலில் என் கண்ணீர் அஞ்சலி..!! 

எவனுக்கு என்ன நடந்தாலும் 
தனக்கு தன் வேலையென, 
மானம் கெட்ட பிறவிகள் 
ஈனம் கெட்டுப் போய் 
வேடிக்கை பார்க்கும் போது 
மனம் வலித்து சொல்கிறது 
இந்த பிணங்களுக்கே 
வேண்டும் முதல் கண்ணீர் அஞ்சலி..!! 

நெஞ்சில் ஈரம் இல்லாதவனுக்கு 
கஞ்சி ஏறிய சட்டை எதற்கு..?? 
இரக்கம் இல்லாத அவளுக்கு 
இரத்தம் சூழ்ந்த இதயம் எதற்கு.?? 
என்னை கேட்டால் சொல்வேன் 
இரக்கமில்லா மனிதன் கொன்று 
உடனே ஏற்றுவேன் கண்ணீர் அஞ்சலி..!! 

கொலைகாரப் பாவிகள் 
நிலைகொண்ட மண் இது..!! 
கொடுங்கோலனாய் வாழும் 
மக்களை சுமக்கும் மண் இது..!! 
அப்பேற்பட்ட ஜீவன்களுக்கே 
முதலில் கண்ணீர் அஞ்சலி..!! 

நூலிழை அளவு கூட மனிதம் இன்றி 
நூதன முறையில் வாழும் மக்கள்..!! 
நிலை தடுமாறி சாக கிடப்பவனை 
நிழற் படம் எடுக்க துடிக்கும் மக்கள்..!! 
இழிவாய்ப் பிறந்த இச்சவ மனிதனுக்கே 
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி..!!