www.gamblinginsider.ca

24 July 2015

தாமரை இலை ஆசைகள்...!! -Mano Red

ஆசை போட்ட சாலையில்
ஆரம்பித்த மனிதப் பயணம்
அவர்களின் பையிலில்லை
ஆசையின் கையிலிருக்கிறது..!!

ஆசையின் மையப்புள்ளியை
ஓசையின்றி சுற்றியே
பாழாய்ப்போன மனிதனின்
வாழ்க்கை ஓடுகிறது..!!

வேண்டும் என்கிற எண்ணம்
மீண்டும் விரிவடைகிறதே தவிர,
சாகும் வரை இதுவே
போதுமென மனம் சொல்வதில்லை..!!

ஒரு ரூபாய் கிடைத்தால்
நூறு கிடைக்கும் வரை
ஆசை சும்மா விடுவதில்லை
தரையைப் பார்த்து நடக்க வைக்கிறது.!!

மண்ணாசைக்கு கொலையும்,
பொன்னாசைக்கு பழியும்,
பெண்ணாசைக்கு பாபமும்,
சுமப்பது தான் மிச்சம்...!!

சகலமும் துறந்து
யாசிக்கும் துறவி ஆகவேண்டாம்,
இருப்பது போதுமென
யோசிக்கும் மனிதப் பிறவி போதும்..!!

சலனமும் சபலமும்
தாமரை இலைத் தண்ணீர் போல்
கொஞ்சம் இருந்து
நஞ்சு ஆகாதவரை நல்லதே..!

எதிர்பார்ப்பைக் குறைத்தால்
எதிர்வருவதெல்லாம் நிறையே,
மொத்தத்தில் ஆசை
மொழிகளற்ற தீய பாஷை...!!