பூ கொடுத்து
மடியாத காதல்,
செருப்'பூ' காட்டலில்
முடிந்து விடுகிறது...!!
காதலுக்கு சாட்சி
பூவாக இருந்தால்,
மோதலின் சாட்சியாக
செருப்'பூ'வே வருமென்கிறது
காதல் நீதி...!!
பூக்கள் கொண்டு
கோவில் போனாலும்,
வாசலில் விட்ட
செருப்'பூ'க்களில் தான்
மனம் கிடக்கிறது..!!
வாசத்தில் ஒன்றுமில்லை
வாசலில் தான் இருக்கிறது..!!
பூக்கள் தோற்கும்
மெல்லிய பாதமென
வர்ணிக்கும் போதெல்லாம்,
செருப்'பூ'க்களின்
செருக்கு கூடி நிற்கிறது...!!
பெண்களின் பாதம் காத்த
பெருமையுடன்..!!
வன்முறை விளக்க
காட்சிகளில்
செருப்'பூ' மிதிக்க
பூ நசுக்கி கசக்கிப்
நடிக்க வைக்கப் படுகிறது..!!
பூவிற்காக அழுவது என்னவோ
செருப்'பூ'வாகவே இருக்கிறது..!!
பூ-விற்கும்,
செருப்'பூ'-விற்கும்
மனிதனுக்கு தெரியாது,
பூவிற்கும்
செருப்'பூ'விற்கும்
இடைவெளி என்பது
தலை கால் புரியாத
தூர அளவு மட்டுமே...!!