சூழ்நிலையின்
சூழ்ச்சி சுழல்,
பதைபதைக்கும்
நிமிடத்தில்
புதை மணலில்
இடறியதாய்,
மீளாத்துயரில்
போராட
மட்டுமீறித்
தவித்த மனம்…!!
பாசத்தின்
மோச மோகத்தில்
மழையில் நனைந்த
மண் வீட்டின்
சுவராய்
தொட்டதும்
பட்டென இடிந்த
சல்லடை இதயம்…!!!
தொற்றுநோய்
பாதிப்பின்
ஆரம்ப நிலையாய்,
வெளிசந்தோச
உள்அழுகையுடன்
நரக நாட்களின்
நடுவிலிருந்து
நிலைகுலைந்து
நகர்ந்த நேரம்…!!
முகத்தோற்றம்
வைத்து
மழுப்பி பேசினாலும்
அன்றாடம்
மன்றாடி,
அந்தரத்தில்
தொங்கும்
தூக்கணாங்குருவியாய்
பட்டபாடு..!!
நுணுகி ஆராய்ந்து
வசப்படுத்த
தெரியாமல்,
தவறென்ற போதெல்லாம்
ஆயத்தம் ஏதுமின்றி
வெக்கி தலைகுனிந்த
தைரியம்..!!
வாழ்வில்
தொடாமல் இடாமல்
அங்கங்கே
விழுந்த
அனிச்சை முடிச்சுகளெல்லாம்
அனுபவத்தின்
அவசரநிலையை
ஆழமாய் பிரகடனப்படுத்தி
இருந்தது..!!