கொஞ்சம் இரு,,
அங்கே சலனம்
இல்லாமல்
ஏதேதோ சத்தம்
கேட்கும்..!!
அங்கே முதலிலிருந்து
முடிவு வரை
எல்லாம் உனக்குத்
தெரியுமென
எனக்கும்
தெரியும்..!!
ஏமாற்ற நினைக்காதே,
அங்கு வேண்டுமென்றே
ஏமாற நான்
தயார்…!!
அங்கு சரியாக
இருக்கத்
தேவையில்லை,
தவறாக இருத்தலே
போதும்..!!
சண்டை தொடரலாமே..
அங்கே சமாதானமாகி
யாருக்கு
என்ன லாபம்..??
அங்கே பாரபட்சம்
எதற்கு..?
எல்லாமே பறிகொடுத்த
பின்
என்ன மிச்சம்
இருக்கும்..!!
அங்கே முதலில்
தேடுவோம்,
எல்லாம் முடிந்தபின்
அப்புறம்
வேண்டுமெனில்
தொலைத்து
விடலாம்…!!
இருளில் தான்
வாழ்க்கை,
அங்கே வெளிச்சம்
விரட்ட
பழகிக் கொள்வோம்..!!