www.gamblinginsider.ca

18 January 2013

ஆவிகளுடன் நான் பேசினேன்....!!!!


ஆவிகளுடன் நான் பேச
ஆரம்பித்துவிட்டேன்,
ஆவி பறக்க
அவளுடன் தேநீர் அருந்திய
அந்த நாளில் இருந்து...!!!

நரகம் என்னை
ஒதுக்கிவிட்டது,
எனை மறந்து
அவளுடன் பழகிய
அந்த சொர்க்க நாளில் இருந்து..!!

அழுகை எனக்கு
புளித்து போனது,
உள்ளம் குளிர
அவளுடன் சிரித்து பேசிய
அந்த நொடியில் இருந்து....!!!

இப்படியாக
என்னை மாற்ற
அவள் மாறினாள்...!!!!
அவளுக்காக நான்
என்னையே மாற்றினேன்...!!

பொல்லாத காதல்...!!!!


அவள் என்பெயரை மட்டுமே
உச்சரிக்க வேண்டுமென,
அவளை நச்சரித்த
என் நாட்கள் எல்லாம்,
என்னை இப்போது
எச்சரிக்க துணிந்துவிட்டன..!!

அவளுடன் நனைந்த என் மழையும்,
அவளுடன் இணைந்த என் இதயமும்,
அவளுடன் பிணைந்த என் காதலும்,
எதிர்வினையாக மாறி
என்னை வெல்ல..!!!

விட்டுகொடுத்தவன் போல
நான் என்னை விற்றுவிட்டேன்
அந்த பொல்லாத காதலுக்கு...!!!

கனவு நாடகம்..!!!


அவளை பார்த்து
கவிதைகளே வாய்மூடி
நிற்கும் போது,
நான் மட்டும்
அவளை பற்றி கவிதையாக
எப்படி சொல்வது...???
என சொல்லி கொண்டிருக்கும் போதே,

என் உதடு அவளை பற்றி
பொய் சொல்ல துடிக்க,
என் கண்கள் அவளிடம்
விளையாடி முடிக்க,
நான் ஒன்றுமறியாதவன் போல்
தெரியாமல் நடிக்க..!!!

நான் விரும்பிய நிஜ நாடகம்,
கனவில் மட்டும்
கை கோர்த்து
நிழலாக மறைந்துவிட்டது...!!

சாட்சி...????


எனக்கும் என் தொலைபேசிக்கும் 
இடையே காதல் வளர்ந்ததற்கு, 
அவளுக்கு இடைவெளியின்றி 
நான் அனுப்பிய குருந்தகவல்களே 
உண்மையான சாட்சி....!!!!