எத்தனை முறை
ருசித்தாலும்
நிறம் வேறாக
இருக்கலாமே தவிர,
ருசி மாறிவிடாது..!!
காமத்தின் பேய்க் கண்களுக்கு
இது புரியாது..!!
ராவண நோக்கத்தில்
ரகசியமாய்
பின்னால் சென்று,
ஆளில்லா இடைவெளியில்
கவர்ந்து செல்ல
வலை விரிக்கிறான்..!!
கடைக்கண் பார்வையெல்லாம்
சம்மத அர்த்தமில்லை,
அவளின் அசைவுக்கெல்லாம்
பல்லை காட்டிவிட்டு
கையை பிடிக்க
காய்ந்த மனிதன் அலைகிறான்..!!
மகனுக்கு
பெண் பார்க்க போனால்,
வரப்போகிற மருமகளுக்கு
மாமியார் தேடும்
மாமனார் கூட்டத்தில்
உத்தமன் என
யாரைக் கை காட்டுவது..??
போகிற இடமெல்லாம்
காதல் அம்பு விடுவதை விட்டு
அன்பு விடுங்கள்,
நிச்சயம்
மனிதத்தையும்,
மனிதனையும்
வென்று விடலாம்..!!
பெண்கள்
பாஞ்சாலியாய் சபதமெடுக்க
பாண்டவர் துணை வேண்டாம்,
துரத்தி வரும்
துச்சாதனன்களின் தொல்லை
இல்லாமலிருத்தலே போதும்..!!