www.gamblinginsider.ca

22 August 2014

அன்பென்னும் மழை...!!-Mano Red

உயிரில் பாதி
உணர்வில் மீதி
உணர்ந்து கொண்டேன்
வியந்து நின்றேன்,
தொலைவில் இருந்தும்
விழியில் கலந்தும்
பிரிந்து நடந்தேன்
அழுது சரிந்தேன்..!!

தாய் உன்னை
விட்டு வருகிறேன்
நீ தவிப்பதை
கொஞ்சம் ரசிக்கிறேன்,
வேறிடம்
போக மறுக்கிறேன்
மறுபடியும்
பிறக்க துடிக்கிறேன்..!!

எதுவுமே கூறாமல்
நானுன்னை பாராமல்
இருக்க மாட்டேன்,
உன்னிடம்
எதையும் மறைக்க மாட்டேன்,
மறைத்தாலும்
வெறுக்க மாட்டேன்,
வெறுத்தாலும்
என்றும் மறக்க மாட்டேன்..!!

பொய்யாக இல்லாமல்
மெய்யாக இருக்கிறாய்,
என் தலை கொய்தாலும்
என்னுயிர் நீ செய்கிறாய்,
எனக்கென இருக்கவே
மீண்டும் என்னுடன் பிறக்கிறாய்,
கடும் துன்பத்திலும்
தொடும் இன்பத்திலும்
அன்பு செய்தே
அடிமை ஆக்குகிறாய்...!!

அம்மா நீ
எனக்குள் இருக்கிறாய்,
அன்பென்னும்
மழையில் நனைக்கிறாய்,
அதிகமாய்
என்னை ரசிக்கிறாய்,
இன்னும் குழந்தையாய்
தினம் வளர்க்கிறாய்,
இருந்தும் என்னால்
சிரித்து அழுகிறாய்...!!