www.gamblinginsider.ca

16 April 2015

ஒரு பிடி மண்..!!-Mano Red



விவசாயம் 
இது தொழில் மட்டுமல்ல,
உலகின் உயிர்..!!
நம் விவசாய வரலாறு 
வெறும் புராணமோ 
பொய் புரட்டோ இல்லை,
அதையெல்லாம் கடந்ததென
நமக்குத்தான் புரியவில்லை ..!!

விவசாயத்தில்
முன்னோர் கொடுத்த  
கொடையின் நீட்சியையே 
இன்று நாம் 
அனுபவிக்கிறோம்,
ஆனாலும் இதை 
அடுத்த தலைமுறைக்கு 
அனுப்ப மறுக்கிறோம்..!!

தற்போதைய விவசாயி 
தன் பிள்ளைக்கு
விவசாயம் வேண்டாமென
மறுத்துக் கைவிடும் போது,
அவன் மட்டும் போகவில்லை,
ஆயிரமாண்டு விவசாய நீட்சியும் 
அத்தோடு அறுபட்டு போகிறது..!!

மெய்ஞ்ஞானம் கொண்டவர்கள்
விவசாயத்தின்
விஞ்ஞானக் கரை காண
மறுக்கிறார்கள்,
தன்னை மண் மூடினால் புரியும்
ஒரு பிடி மண்ணின் அருமை..!!

கையறுநிலையில் விவசாயி 
தற்கொலை செய்ய வேண்டாம்,
விவசாயத்திற்கு 
கையால் ஆகாதவர்களை 
தேடித் தேடி
கொலை செய்யட்டும் ...!!

யாருக்காக போராடுகிறோம்..??
அரசியலில் விவசாயம் இருக்கிறது
நிலத்தில் தான் இல்லை..!!
விவசாயிகளின் சாபக்கேடு 
அரசியல் பேச்சையெல்லாம்
மேடையிலேயே மறப்பது தான்..!

கைப்பிடியளவு உள்ள
இந்த மண்ணில் தான்
வாழ்க்கை இருக்கிறது,
கவனமாக காப்பாற்றினால் 
காலத்திற்கும் பிழைக்கலாம்..!!
அழிக்க நினைத்தால் 
அழிவது மனிதகுலமும்தான்..!!