உச்சி வெயில் தலை சரிய, பறவைகள் இடமறிந்து படபடக்க, தென்றலை தேவதைகள் அழைக்க, பால்மழை பொழிய நிலா துடிக்கும் அந்நேரம்..!!
மெல்லிய மாலை வேளையில், நொறுங்கி போன வான வெளியில், கொஞ்சி கொண்டிருக்கும் கடற்கரையில், உன்னிடம் என் காதலை நான் பதிக்க ஏற்றுகொண்டு தலை அசைக்கவும், ஏமாற்றவும் உனக்கு உரிமையுண்டு..!!
உன் இடையினம் பார்க்க துணிந்த போது, மெல்லினமாய் நீ தந்த வெக்கம் போதுமே, வல்லினமாய் எனக்குள் புதைந்து போவேன்.. !!
வெற்றிடமாய் இருந்த இதயத்தில், காந்தமுள்ள ஓவியமாய் காதலை நிரப்பி போகும் திசையெல்லாம் என்னையும் இழுத்து கொண்டு போகிறாயே...!!
குறுகிய நினைவில் உன்னை உட்புகுத்தி, மீட்க முடியா சக்தி கொண்டு, என்னுள் சிறை வைக்க போகிறேன், நீ சரியென்று சொல்லும் ஒற்றை வரியில்..!!