இறப்பதை தவிர
வேறு எதுவும்
அவன் செய்யவில்லை,
அவன் இறப்பு குறித்து
பேசும் போதாவது
துயரத்தை விடுங்கள்..!!
எவனோ தந்த பூமாலையை
எமன் கவர்ந்த அவன்
மார்பில் வைப்பதற்கு மாறாக,
நீங்கள் வளர்த்த ஒரு பூவை
உடல் நீங்கி சென்றவனிடம்
கொடுத்து வாருங்கள்..!!
இருக்கும் போது அவனை
போற்றாத நீங்கள்,
இறந்த பின்பாவது
தூற்றாமல் இருங்கள்,
எதையாவது சொல்லி
பொய்க் கண்ணீருக்காக
யாரையும் தூண்டாதீர்கள்..!!
இறந்த அவனுக்காக
உண்ணா விரதம்
இருக்க வேண்டாம் நீங்கள்,
அறுசுவை விருந்து
உண்ணாமல்
இருந்தால் போதும்...!!
இதுவரை இறந்தவனுக்கு
எதுவும் செய்யாத நீங்கள்
இனிமேலும்
எதுவும் செய்யாதீர்கள்,
மௌன அஞ்சலி என்ற பெயரில்
அவன் தனிமையை கொல்லாதீர்கள்..!
குறைந்தபட்சம் அவனின்
இறுதி ஊர்வலத்தை
விளம்பரம் செய்யாமல்
வீடு வந்து சேருங்கள்,
இறக்கும் முன்பு
அவனும் மனிதன் தானே.!!