www.gamblinginsider.ca

27 February 2017

வேறொன்றுமில்லை! -Mano Red



மிதமிஞ்சிய பொழுதுகளில்
மீளாத்துயரொன்று
நினைவு பியானோவை மீட்டி
வர்ணிக்க முடியாத
கதம்ப இசையை எழுதியது.
தன்னந்தனிமையில்
தவித்திருக்க முடியாமல்
நடுங்கிக்கொண்டே
நாதஸ்வரம் வாசிப்பது எப்படியென
குளிருக்கு ஆடும் பற்களுடன்
முனங்கல் ஒலிகளும் சேர்ந்து விவரித்தன.
பிரிந்தும் பிணைந்தும்
விலகியும் விலக்கியும்
நினைவுகள் கூடுவிட்டு கூடு பாய்ந்தன.
குழப்பமேதுமில்லாமல்
இதுதான் அதுவென்றும்
அதுதான் இதுவென்றும்
கள்ளத்தனத்தில் கடவுளை உணர்ந்து
காமத்தைப் புறந்தள்ளி
காதலைப் பிழிந்த
நிகழ்வு நடந்ததே தவிர
வேறொன்றுமில்லை.