www.gamblinginsider.ca

09 March 2013

மூன்று குரங்கு பொம்மைகள்...!!


உலகம் போகும் பாதை கண்ட 
மூன்று குரங்கு பொம்மைகளின், 
யாரையும் புண்படுத்த எண்ணாத 
தனிப்பட்ட எண்ணங்கள்..!! 

தீயதை கேட்காமல் இருந்த என்னை, 
வன்முறை பேச்சுகளும், 
வெடிகுண்டு சிரிப்புகளும், 
தோட்டா சத்தங்களும், 
ஆன்மாக்களின் அலறலும், 
மனிதர்களின் கதறல்களும், 
காதிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!! 

தீயதை பார்க்காமல் இருந்த என்னை, 
வழிந்தோடும் ரத்தங்களும் 
சிதறிய மனித உடல்களும், 
வன்முறை காட்சிகளும், 
பாலியல் கொடுமைகளும், 
வறட்சி கொலைகளும், 
கண்ணிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!! 

தீயதை பேசாமல் இருந்த என்னை, 
நாட்டு நடப்புகளும், 
மனித உரிமை மீறல்களும், 
ஒழுக்க இழிவுகளும், 
மோசடி நிகழ்வுகளும், 
குறுக்கு வழிகளும், 
வாயிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!!

பெண்மையில்லா பூமியில்...????


பெண்மையில்லா பூமிதனை, 
கற்பனையில் சுற்றி வந்தேன்..!! 
மையில்லா காகிதம் போல 
உயிரிழந்து பூமி சுழன்றது..!! 

பெண்மையில்லா பூமியில், 
அன்பின் வாசல் சுத்தமில்லை, 
வீட்டில் வெளிச்சம் இல்லை, 
பசி போக்க ஆளில்லை, 
நலம் விசாரிக்க நாதியில்லை, 
நிலத்தில் உணவில்லை, 
வானத்தில் மழையில்லை, 
மொத்தத்தில் பூமியில் ஒன்றுமில்லை..!! 

பெண்மையில்லா பூமியில், 
கற்பனைக்கு இறக்கை இல்லை, 
அழகுக்கு ஆரம்பம் இல்லை, 
காதலுக்கு காதல் இல்லை, 
அறிவுக்கு அடித்தளம் இல்லை, 
பாசத்திற்கு பெயர் இல்லை, 
ஆணுக்கு உயர்வு இல்லை, 
ஆண்மைக்கு அழகில்லை..!! 

மொத்தத்தில் பெண்மை இல்லாத பூமி, 
உயிர் இருந்தும் உணர்வில்லாத சாமி...!!!