www.gamblinginsider.ca

04 November 2014

கொள்ளைக்காரி ...!! - Mano Red

கர்வமில்லாத
காதல் கவிதை அவள்,
முத்தப் பிழையுடன்
மெல்லிய வரிகளில்
துல்லியமாக
அள்ளிக் கொள்கிறாள்...!!

மருதாணி வைத்த
களவாணி அவள்,
கோவத்தில் சிவக்கிறாளா
இல்லை
மோகத்தில் மிதக்கிறாளா..?
மொத்தத்தில் என்னை
காதல் யுத்தத்தில் வெல்கிறாள்..!!

தேடி வராத
தேவதை அவள்,
மிச்சம் வைக்காமல்
மிச்ச உயிரையும்
கூச்சமின்றி கேட்டு
கூச்சல் போடுகிறாள்...!!

அக்கம்பக்கம் குறித்து
அக்கறை இல்லாதவள் அவள்,
மெதுவாய்
என் பக்கம் வந்ததும்
சொர்க்கம் வந்ததாய்
வெக்கம் கொள்கிறாள்...!!

பாரதியின் செல்லம்மா போல
செல்லமானவள் அவள்,
கொஞ்சல் மொழியில்
கொஞ்சம் பேசி,
இடைவெளியற்ற
கடைவிழியில்
கைது செய்கிறாள்...!!

காந்தம் போல
ஒட்டிக் (கொல்லும்) கொள்ளும்
வெள்ளை
கொள்ளைக்காரி அவள்,
நேர் எதிர் துருவமின்றி
புருவங்களில் ஈர்க்கிறாள்..!!