www.gamblinginsider.ca

14 October 2014

அறிவு இல்லையோ...?? - Mano Red

ஒரு கதவு மூடினால்
இன்னொரு கதவு
திறக்குமாம். !!
நாம் நினைத்ததை
கதவுகளே கேக்காத போது
காலம் எப்படி கேக்கும். ??

ஒரு சூடாவது
வைத்துப் பார்த்தால் தான்
'நல்ல மாடு' என்ற
பெயர் தரும் உலகம்...!!
மாட்டிற்கே இந்த கதியெனில்
நல்ல மனிதனென
எப்படி பெயர் வாங்குவது..??

காய்ச்சலில் கிடந்த போது
விபூதி வைத்து
நெற்றி தடவினார் அப்பா..!!
அவரிடம் எப்படி
கடவுள் மறுத்து
நாத்திகம் பேச முடியும்...??

புத்தர் பற்றி
பெருமை கொள்ளும் போது,
சித்தார்த்தனின் மனைவி
குடும்பம் பற்றி
கொஞ்சம் கூட
கவலைப்படாமல் இருப்பது
யாருடைய ஆசை...??

சிலர் பணத்துக்கு
மதிப்பில்லை
என்பதை புரிந்து கொள்ளவே,
அதிக பணம்
சம்பாதிக்கிறார்களாம்..!!
சம்பாதித்த பின்
என்ன செய்வார்களோ..??

உலகம் நிச்சயம்
மகிழ்ச்சியாக
இருக்கும் போது,
நாம் ஏன்
உலகை நினைத்து
கவலைப்பட வேண்டும்..??
ஒருவேளை நமக்கு
அறிவு இல்லையோ..??