சிறு பூக்களை வேரோடு பிடுங்கி, கசக்கி கிழித்து மிதித்து துன்புறுத்தும், கொடிய மிருகத்தினும் கேவலமான பாலியல் கொடுமை தரும் பேய்களே..!!!
யாரை நம்பி எங்கள் குழந்தை பள்ளி சென்று திரும்புவது, பசியோடு திரியும் காம பேய்களை என்னவென்று அடையாளம் காட்டுவது..??
அரக்கனே உன் உருவப்படம் ஒன்று கொடு, இவன் தான் குழந்தை தின்னும் பேய் என, என் பிள்ளைக்கு நான் காட்டிவிடுகிறேன்..!!
மனித தலை கொண்ட மிருகமே, குழந்தையில் தெய்வம் நீ பார்த்ததில்லையா, இறைவன் வாழும் புன்னகையை இழிவு கொண்ட உன் கரம் அழித்துவிட்டதே..!!
நீயும் மனித வழியில் வந்தவன் தானே, உன் உடம்பிலும் ரத்தமுள்ள இதயம் தானே, இச்சை பசி கொண்ட உனக்கும், பிணம் தின்னும் கழுகுக்கும், வித்தியாசம் ஒன்றுமில்லை..!!
உன்னை பெற்றது பாவமென உன் தாய் நினைத்திருப்பாள்...!! உன்னை அழிக்காமல் இன்னும் தன் மடியில் சுமந்து கொண்டிருக்கும் என் பூமித்தாயோ கண்ணீர் சிந்துகிறாள்..!!