www.gamblinginsider.ca

07 March 2013

ஆயிரம் கேள்விகளும்,அம்மாவும்..!!!


மின்மினி பூச்சிக்கு மின்சாரம் தேவையா.? 
சூரியன் காணாமல் நிலவு தேயுமா..?? 
பூக்களுக்கு பூக்களை பிடிக்குமா..?? 
கடிகார தேடலில் நேரம் வீணாகுமா..?? 
வானவில்லின் வண்ணம் தீர்ந்து விடுமா..?? 
மின்னலில் புகைப்படம் முடியுமா..?? 
மழைக்கு தாகம் எடுக்குமா..?? 
குடைக்கு யார் குடை பிடிப்பது..?? 
கேள்வி இல்லையெனில் பதில் வருமா..?? 
கண்ணில்லா கடவுளை கண்மூடி காண்பதா..?? 
இதயத்திற்காக இதயம் துடிக்கும..?? 
பணத்திற்கு பணம் தேவையா..?? 
அன்புக்கு அடிமையானால் சரியா..?? 
கடவுளின் கடவுள் யார்..?? 

என என்னுள் எழும்பிய 
ஆயிரமாயிரம் வினாக்களுக்கு, 
ஒற்றை புன்னகையில் பதில் தந்தாள் அம்மா..!! 

நான் பெற்றதோ ஒரே ஒரு பதில் 
கடவுளின் கடவுள் தாய் என்று..!!


உனக்காக அல்ல எனக்காக..!!


பெண்ணே உன்னை காணாமலே 
கண்கள் கெட்டு போனதே...!! 
உன்னை நாளும் பார்க்க 
இதயம் துடி துடிக்குதே..!! 

உளறிய உன் வார்த்தைகளையும், 
அளவில்லா உன் பொய்களையும், 
மனதில் பதிவு செய்து இன்னும் 
கேட்டு கொண்டிருக்கிறேன்..!! 

கால நேரமின்றி உன்னை வர்ணித்த 
என் வார்த்தைகள் எல்லாம், 
என்னை வஞ்சிக்க ஆரம்பித்து விட்டது..!! 

என்னுள் ஒரு சிறு தயக்கம், 
உனக்காக நான் யாரை வெறுப்பது..!! 
பார்த்த என் கண்களையா..?? 
நினைத்த என் இதயத்தையா..?? 
இல்லை என்னை நானே வெறுக்கிறேன்..!! 
உனக்காக அல்ல எனக்காக..!!