பெண்ணே உன்னை காணாமலே கண்கள் கெட்டு போனதே...!! உன்னை நாளும் பார்க்க இதயம் துடி துடிக்குதே..!!
உளறிய உன் வார்த்தைகளையும், அளவில்லா உன் பொய்களையும், மனதில் பதிவு செய்து இன்னும் கேட்டு கொண்டிருக்கிறேன்..!!
கால நேரமின்றி உன்னை வர்ணித்த என் வார்த்தைகள் எல்லாம், என்னை வஞ்சிக்க ஆரம்பித்து விட்டது..!!
என்னுள் ஒரு சிறு தயக்கம், உனக்காக நான் யாரை வெறுப்பது..!! பார்த்த என் கண்களையா..?? நினைத்த என் இதயத்தையா..?? இல்லை என்னை நானே வெறுக்கிறேன்..!! உனக்காக அல்ல எனக்காக..!!