மின்மினி பூச்சிக்கு மின்சாரம் தேவையா.? சூரியன் காணாமல் நிலவு தேயுமா..?? பூக்களுக்கு பூக்களை பிடிக்குமா..?? கடிகார தேடலில் நேரம் வீணாகுமா..?? வானவில்லின் வண்ணம் தீர்ந்து விடுமா..?? மின்னலில் புகைப்படம் முடியுமா..?? மழைக்கு தாகம் எடுக்குமா..?? குடைக்கு யார் குடை பிடிப்பது..?? கேள்வி இல்லையெனில் பதில் வருமா..?? கண்ணில்லா கடவுளை கண்மூடி காண்பதா..?? இதயத்திற்காக இதயம் துடிக்கும..?? பணத்திற்கு பணம் தேவையா..?? அன்புக்கு அடிமையானால் சரியா..?? கடவுளின் கடவுள் யார்..??
என என்னுள் எழும்பிய ஆயிரமாயிரம் வினாக்களுக்கு, ஒற்றை புன்னகையில் பதில் தந்தாள் அம்மா..!!
நான் பெற்றதோ ஒரே ஒரு பதில் கடவுளின் கடவுள் தாய் என்று..!!