www.gamblinginsider.ca

02 August 2015

பேசா மனிதம்...!!-Mano Red

அதென்ன அவசரமோ...?
எல்லோரும் போலவே
முண்டியடித்து முன்னால் நின்று
பாட்டிலை வாங்கி
பிசகாமல் திருகி
முட்டக் குடித்து பின் நகர்ந்தான்..!!
*
மதுவாசம் சும்மா இல்லை
ஆவியில் புகுந்து
வெய்யில் காற்றில்
வேர்வையில் கலந்து
மிச்சமிருந்த உயிருடன் சேர்த்து
வெளியான போது
காற்றும் கிறங்கியிருக்கும்..!!
*
ஒற்றை ஆள்
தனியாக வரும் போதே
தள்ளி ஓடும் இந்த மனிதம்,
தள்ளாடி வரும் அவனை
தன்பக்கம் இழுக்கவா போகிறது..??
வழிவிடுகிறேன் என்று
வழிதவறியது மனிதாபிமானம்...!!
*
மிச்ச சொச்சமிருந்த மானமும்
ஆடையுடன் சேர்ந்து அவிழ
அனைவருக்குமே அவன்
முகம் சுழிக்கும் அசிங்கமானான்..!!
ஆனால்
அங்கிருந்த அனைவரும்
மானமுள்ளவர்களா தெரியாது..?!
*
ரோட்டில் படுத்தது முதல்
அம்சமாய் வாந்தி எடுத்து
நாசம் செய்தது வரை
அவனுக்கு நினைவில்லை
ஆனாலும் ஊருக்கு நினைவிருக்கும்,.!
தவழ்ந்து தவழ்ந்து
வீடு வந்து சேர்ந்தாலும்
சோகமும்,புலம்பலும்,வலியும்
குறைந்தபாடில்லை...!!
*
கொஞ்சம் பேசாம
வாய மூடிட்டு இருந்தா என்ன..?
விழப்போற எழவா
கொறஞ்சிடப் போகுது..!!
திட்டிக்கொண்டே போனார்
அவன் அப்பா..!!
*
அவருக்கு தெரியும்
பிணவறையில் தினம்
பிணங்களுடன்
பிழைப்பு நடத்தும் அவனுக்கு
எழவுக்கு மட்டும் குறையே
இருந்ததில்லை என்று..!!

பேசா மனிதம்...!!-Mano Red

அதென்ன அவசரமோ...?
எல்லோரும் போலவே
முண்டியடித்து முன்னால் நின்று
பாட்டிலை வாங்கி
பிசகாமல் திருகி
முட்டக் குடித்து பின் நகர்ந்தான்..!!
*
மதுவாசம் சும்மா இல்லை
ஆவியில் புகுந்து
வெய்யில் காற்றில்
வேர்வையில் கலந்து
மிச்சமிருந்த உயிருடன் சேர்த்து
வெளியான போது
காற்றும் கிறங்கியிருக்கும்..!!
*
ஒற்றை ஆள்
தனியாக வரும் போதே
தள்ளி ஓடும் இந்த மனிதம்,
தள்ளாடி வரும் அவனை
தன்பக்கம் இழுக்கவா போகிறது..??
வழிவிடுகிறேன் என்று
வழிதவறியது மனிதாபிமானம்...!!
*
மிச்ச சொச்சமிருந்த மானமும்
ஆடையுடன் சேர்ந்து அவிழ
அனைவருக்குமே அவன்
முகம் சுழிக்கும் அசிங்கமானான்..!!
ஆனால்
அங்கிருந்த அனைவரும்
மானமுள்ளவர்களா தெரியாது..?!
*
ரோட்டில் படுத்தது முதல்
அம்சமாய் வாந்தி எடுத்து
நாசம் செய்தது வரை
அவனுக்கு நினைவில்லை
ஆனாலும் ஊருக்கு நினைவிருக்கும்,.!
தவழ்ந்து தவழ்ந்து
வீடு வந்து சேர்ந்தாலும்
சோகமும்,புலம்பலும்,வலியும்
குறைந்தபாடில்லை...!!
*
கொஞ்சம் பேசாம
வாய மூடிட்டு இருந்தா என்ன..?
விழப்போற எழவா
கொறஞ்சிடப் போகுது..!!
திட்டிக்கொண்டே போனார்
அவன் அப்பா..!!
*
அவருக்கு தெரியும்
பிணவறையில் தினம்
பிணங்களுடன்
பிழைப்பு நடத்தும் அவனுக்கு
எழவுக்கு மட்டும் குறையே
இருந்ததில்லை என்று..!!