www.gamblinginsider.ca

24 November 2012

வெள்ளை காகிதம்..!!!


http://eluthu.com/kavithai/93973.html

பள்ளி சென்று படிக்கும் 
பதின்மூன்று வயது பூவுக்கு, 
இரும்பினால் காப்பு செய்து 
திருமணம் முடித்தனர்-அவளை 
பெற்றதாய் பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள்.. 

திருமண பந்தம் தொடங்கும் முன்பே, 
கணவரை எமனுக்கு விற்று விட்டாள் 
நோயின் காரணமாக..,,,, 

விளையாடிகொண்டிருந்த அவளிடம் 
பூவும் பொட்டும் சண்டையிட்டு பிரிந்தது...?? 
வெள்ளை உடை தோழியானது...!!! 

எதுவும் புரியாமல், 
சொல்லவும் முடியாமல், 
என்னவென்றே தெரியாமல், 
அந்த மழலை பூ திணறியது. 

முள் வேலிக்குள் முடங்கிய பூவை, 
வார்த்தை தீயினால் சுட்டார்கள், 
நான்கு விதமாய் பேசும் அந்த நால்வர்கள்...!! 

என்ன வரம் வங்கி வந்தாளோ, 
இப்படி ஒரு வாழ்க்கை-என 
ஊர் பெரிசுகள் ஒப்பாரி வைக்க, 
வரம் கொடுத்தவன் வேடிக்கை பார்த்திருந்தான்..??


யாரு செய்த பாவமோ..??? 
எனக்கு மகளாக வந்தாய்-என 
தாய் தன் புலம்பல் விதைகளை, 
ஆழமாய் விதைத்தாள்,,..!! 

விளையாட வராமல் உனக்கு 
என்னடி பெரிய வேலை..??? 
இனிமேல் உன்னுடன் பேசமாட்டோம்-என 
சிறு தோழிகள் கோவமாய் தோலுரித்தனர்..!! 

சோகம் புடைசூழ வந்த மாமியார், 
என் மகனை கொல்ல வந்த பாவி, 
நீ நாசமாய் போவாய் என 
தன் பங்கு உரையை சிறப்பாக முடித்தாள்...!! 

சிலையாக உருகி நின்ற அவளை, 
நிலவு மட்டுமே ஆறுதலாக பார்த்தது. 
இவளும் என்னை போலவே 
ஒன்றும் எழுதப்படாத "வெள்ளை காகிதம்" 
யாரும் கிழித்து விடாதீர்கள்....!!!

மர்ம காய்ச்சல்...???


http://eluthu.com/kavithai/94006.html

காலை மூன்று மணிக்கு 
தூக்கம் கலைந்தேன். 
திடிரென எழுந்து 
சற்று தூரம் நடந்தேன். 

எங்கேயோ பார்த்து 
தனியாக சிரித்தேன். 
யாரோ அழைப்பதாக 
நினைத்து ஓடினேன். 

பல் துலக்க நினைத்து 
சாப்பிட சென்றேன். 
சாப்பிட்டதாக உணர்ந்து 
குளித்தும் விட்டேன். 

சட்டை அணியாமல் 
பஸ்ஸில் சென்றேன். 
எங்கோ சென்று பாதி வழியில் 
திரும்பி வந்தேன். 

எண்களை பதிக்காமல் 
தொலைபேசியில் பேசினேன். 
மழை பெய்வதாக எண்ணி 
வெயிலில் நனைந்தேன். 

மணிக்கு ஒருமுறை 
கண்ணாடியை கண் கலங்க வைத்தேன். 
தலை சீவிச் சீவி 
சீப்பை தற்கொலைக்கு தூண்டினேன். 

இதெல்லாம் எதற்கு என்று புரியாமல், 
செய்வினை என தாய் அர்த்தம் கொண்டு 
சாமியாரிடம் கைதியானேன். 

தெய்வத்திடம் கேட்டு குறி சொன்ன சாமியார் 
இது செய்வினை அல்ல செயப்பாட்டு வினை 
இவனுக்கு மர்ம காய்ச்சல் என தீர்ப்பு எழுதினான். 

யாருக்கும் தெரியாது 
இது காதல் பேயின் சதி என்று....!!!

கானல் நீர்..!!!


http://eluthu.com/kavithai/94222.html

ஓடிபிடித்து விளையாடிய 
பள்ளி பருவத்தில், 
மிட்டாய் விற்க வந்த 
பெட்டிக்கடை தாத்தா..!!! 

திருவிழா காலத்தில் 
பலூன் கொண்டு வந்த 
தொப்பி மாமா...!! 

வீதிகளில் பால்,தயிர் 
தினமும் விற்க வந்த 
பெரிய கம்மல் ஆயா..!! 

வீடு தேடி வந்து 
கையை பிடித்தாலும், 
யாரும் ஒன்றும் சொல்ல முடியாத 
வளையல் விற்க வந்த அண்ணாச்சி..!! 

தெருதெருவாய் அலைந்தாலும் 
எப்போதும் புன்னகை மாறாமல், 
கலர் கலராக ஐஸ் கொடுத்த 
சைக்கிள் அண்ணன்...!! 

என எப்போதோ பார்த்த 
முகங்கள் உறவுகளாய் மனதில் நிற்க..,, 

சொந்த உறவுகள் மட்டும் 
கானல் நீராகி விட்டது..?? 
யாருக்கும் தாகம் தீர்க்காமல்..!!