http://eluthu.com/kavithai/93973.html
24 November 2012
மர்ம காய்ச்சல்...???
http://eluthu.com/kavithai/94006.html
காலை மூன்று மணிக்கு
தூக்கம் கலைந்தேன்.
திடிரென எழுந்து
சற்று தூரம் நடந்தேன்.
எங்கேயோ பார்த்து
தனியாக சிரித்தேன்.
யாரோ அழைப்பதாக
நினைத்து ஓடினேன்.
பல் துலக்க நினைத்து
சாப்பிட சென்றேன்.
சாப்பிட்டதாக உணர்ந்து
குளித்தும் விட்டேன்.
சட்டை அணியாமல்
பஸ்ஸில் சென்றேன்.
எங்கோ சென்று பாதி வழியில்
திரும்பி வந்தேன்.
எண்களை பதிக்காமல்
தொலைபேசியில் பேசினேன்.
மழை பெய்வதாக எண்ணி
வெயிலில் நனைந்தேன்.
மணிக்கு ஒருமுறை
கண்ணாடியை கண் கலங்க வைத்தேன்.
தலை சீவிச் சீவி
சீப்பை தற்கொலைக்கு தூண்டினேன்.
இதெல்லாம் எதற்கு என்று புரியாமல்,
செய்வினை என தாய் அர்த்தம் கொண்டு
சாமியாரிடம் கைதியானேன்.
தெய்வத்திடம் கேட்டு குறி சொன்ன சாமியார்
இது செய்வினை அல்ல செயப்பாட்டு வினை
இவனுக்கு மர்ம காய்ச்சல் என தீர்ப்பு எழுதினான்.
யாருக்கும் தெரியாது
இது காதல் பேயின் சதி என்று....!!!
Labels:
காதல் கவிதைகள்
கானல் நீர்..!!!
http://eluthu.com/kavithai/94222.html
ஓடிபிடித்து விளையாடிய
பள்ளி பருவத்தில்,
மிட்டாய் விற்க வந்த
பெட்டிக்கடை தாத்தா..!!!
திருவிழா காலத்தில்
பலூன் கொண்டு வந்த
தொப்பி மாமா...!!
வீதிகளில் பால்,தயிர்
தினமும் விற்க வந்த
பெரிய கம்மல் ஆயா..!!
வீடு தேடி வந்து
கையை பிடித்தாலும்,
யாரும் ஒன்றும் சொல்ல முடியாத
வளையல் விற்க வந்த அண்ணாச்சி..!!
தெருதெருவாய் அலைந்தாலும்
எப்போதும் புன்னகை மாறாமல்,
கலர் கலராக ஐஸ் கொடுத்த
சைக்கிள் அண்ணன்...!!
என எப்போதோ பார்த்த
முகங்கள் உறவுகளாய் மனதில் நிற்க..,,
சொந்த உறவுகள் மட்டும்
கானல் நீராகி விட்டது..??
யாருக்கும் தாகம் தீர்க்காமல்..!!
Labels:
சமுதாய கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)