தாடியைச் சொறிந்தால்
என்ன வருமோ தெரியாது..?
யோசனைகள்
நிச்சயம் வருமென்ற
நம்பிக்கை ஆண்களுக்கு..!!
சம்பாதிக்கும் ஆசை
அத்தனை இருக்கும்,
அதற்கான வழி
ஏழுமலை,ஏழுகடல்
தாண்டி இருப்பது போல்
பயமிருக்கும்...!!
கவிதை எழுதித் தள்ள
கற்பனை நிரம்பி இருக்கும்,
காதலும் காதலியும்
கடல் தாண்டி இருப்பதாய்-வெறும்
கனவு மட்டும் மிச்சமிருக்கும்...!
திரைப்படங்கள்
பார்க்கும் போதெல்லாம்
கதாநாயகனாக வாழ
ஆசை இருக்கும்,
அப்படி வாழ்க்கை வாழ
உருப்படியான கதை தான்
கிடைக்காமலிருக்கும்..!!
உடனிருப்பவன்
முன்னேறிப் போனால்
பொறாமை ரொம்ப இருக்கும்,
உடனே அதிர்ஷ்டம்
நமக்கு இல்லையென்று
தனக்குள் தானே
சொல்வது போல் இருக்கும்..!!
தடம் பதிக்க
நல்ல பாதை இருக்கும்,
பாதை தேடும் போது
தடம் மாறி
தவறுகள் செய்ய
தனிமையும் இருக்கும்..!!
தாடி வளருவதில்
பிரச்சினை இல்லை,
தாடி வளரும் போது
ஆண்கள் வளராமல்
இருப்பது தான் பிரச்சினை,
முகம் பார்க்கும்
கண்ணாடிக்கு தெரியும்
ஆண்களின் மனதும்
அவனின் தாடியைப் பற்றியும்..!!