பாவைக்கூத்து
கொட்டகை,
பாவமாய் கைப்பாவைகள்..!!
ஆட்டுவிப்பவனின்
கைகளுக்குள்
ஆடத் தெரிந்தவைகள்..!!
இழுத்த இழுப்புக்கெல்லாம்
இளித்துகொண்டிருந்தது
அது,
குனிய சொன்னால்
குனிந்தது,
குதிக்க சொன்னால்
குதித்தது..!!
ஆட்டம் முடிந்தபின்
தூக்கி எறிந்ததில்
மரக்கை முறிந்தது..!!
கை தட்டல்கள்
வாங்கிய பாவைக்கு
முறிந்த கை
கட்ட ஆளில்லை..!!
அந்த நாள்
ஆட்டத்திற்கு
அது தேவையில்லையாம்..!!
உடுத்தியிருந்த
பட்டு சீலை
உடனே களையப்பட்டு,
உதறித் தள்ளியதில்
மூலையில்
கிடத்தப்பட்டது..!!
மறுநாளும்
ஆட்டமில்லை,
கவனிக்கவும்
யாருமில்லை..!!
பாவையிலும்
பறவை உண்டு,
பறக்கவே இறக்கை
இல்லை,
பறக்க கற்றுத்
தந்தால்
பகுத்தறிவு
ஒருவேளை வந்திடுமோ…??
உலகம் தானிங்கே
கொட்டகை,
பாவைகள் இப்பாவி
மனிதர்கள்,
பொம்மலாட்டமே
திறமைகள்..!!
குனிந்து
குனிந்தே ஒடிந்து
தலையாட்டியதில்
தடம் மாறியவர்கள்,
சக்கையாய்
பிழியப்பட்டே
குப்பையாய்
ஒதுக்கப்பட்டவர்கள்..!!