www.gamblinginsider.ca

20 June 2013

யாரடி நீ மோகினி...!!!

கனவுகள் அவளது ஊரானால் 
இரவுகள் எனது முகவரியாகும், 
மௌனம் அவளது மொழியானால் 
அமைதி எனது குரலாகும், 
புன்னகை அவளது சிறப்பானால் 
ரசிப்பது எனது தொழிலாகும்..!! 
அவளிடம் என்னை இழந்துவிட்டேன் 
இருப்பதையும் இழக்க துணிந்து விட்டேன் 
இறுதியில் இருப்பது எதுவோ தெரியாது...?? 

விண்ணை தாண்டி வருவேனே...!!!!

காதல் மேகம் கனவில் வருகிறது, 
மழையாய் பொழிந்து கனவை கலைத்தது, 
யாரும் இல்லாத தனிமையை 
திருடி போனது, 
என்னை யாரென என்னிடம் 
கேட்க சொல்கிறது..??