வீட்டில்
சொல்லிவிட்டே
புறப்படுகிறது
ஒவ்வொரு
பயணமும்…!
திரும்பி
வரும் நம்பிக்கையில்
விரும்பியே
ஆரம்பமாகிறது…!!
எந்த கோட்டையை
பிடிக்க
அத்தனை அவசரம்..!!
குருட்டு
வேகத்தில்
விவேகம்
தொலைத்து
தொடங்கிய
இடத்திலேயே
குப்புற
கவிழ்கிறது எல்லாமும்..!!
கொஞ்சம்
பொறு..!!
மலையை கட்டியிழுக்க
யாரும் போவதில்லை..!
தலை போகும்
அவசரத்தில்
தடுமாறி
விடாதே
தலையே போய்விடும்..!!
சாலையில்
மட்டுமல்ல
மனித மூளையிலும்
வேகத்தடை
வேண்டும்..!!
பயண வேகத்தில்
மைல்க்கல்
தூரம் நினைப்பவன்
மனைவி மக்களை
நினைப்பதில்லை..!!
நெடுஞ்சாலையெல்லாம்
மயானம் ஆகும்
முன்,
கரம் சிரம்
புறம் வரிசையில்
அறத்தையும்
கொஞ்சம் சேருங்கள்,
அரிய உயிரின்
மதிப்பை
பெற்றவளிடம்
கேளுங்கள்..!!
வழிவிட்டு வாழுங்கள்,
மெதுவாய் செல்வதும்
பொதுநலக் கோட்பாடே..!!
விதியை மதியால்
வெல்லலாம்,
சாலை விதியை
மதி
மாறும் உன்
தலைவிதி..!!