www.gamblinginsider.ca

31 August 2013

கண்ணீர் அஞ்சலி...!!!

கனக்கிறது இதயம், 
கொதிக்கிறது இரத்தம், 
உதவி என்றதும் உதறி விட்டு 
போகிற போக்கில் 
போகும் மாமனிதர்களை 
பார்க்கும் போதெல்லாம் 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!! 

29 August 2013

என் பேருந்துப் பயணத்தில்...!!!

விண்வெளி ஓடத்தில் பறப்பதாய் 
பகல்நேரக் கனவு, 
நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!! 

கூடுவிட்டு கூடு பாய 
இடை தடையேதும் இல்லை, 
வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!! 

27 August 2013

செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள்..!!

இருப்பதை இழந்து 
அடிப்பவன் புகழ் பாடி 
அடிமையாய் வாழ்பவனுக்கு, 
ஆள்பவனின் பரிசு 
அடியும் உதையும் மட்டுமே..!!! 

26 August 2013

ஊர்ல இருந்து அப்பா கடுதாசி...!!!

வெளியூர்ல இருக்குற மகனுக்கு 
ஊர்ல இருந்து அப்பா கடுதாசி, 

அன்பு மகனே, 
உண்மைய சொல்றேன் 
நாங்க இங்க நல்லா இல்ல.. 
எங்கள நினச்சு நீயும் 
இளச்சு ஓடா போயிருப்பனு 
நல்லாவே தெரியும்..!! 

24 August 2013

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!

அனுமதி கிடைத்தால் 
அவள் கடித்து துப்பும் 
ஒவ்வொரு நகங்களில் இருந்தும் 
ஒரு அழகி செய்வேன்....!!!! 

21 August 2013

பார்வைகள் பலவிதம்...!!!

கண்கள் ஒன்றென்றாலும் 
பார்க்கும் பார்வைகள் பலவிதம்..!! 

புரிய மறுத்து பிரிந்து சென்று, 
பிரிந்த பின் புரிந்து வந்து, 
ஒரே அலைவரிசையில் 
ஒன்றிணைவது காதல் பார்வை..!! 

20 August 2013

அண்ணன் என்னடா, தம்பி என்னடா..??

வேறு கிரகம் தேடி 
அலைந்து கொண்டிருக்கும் 
மனிதா..?? 
கிரகம் பிடித்தவன் போல் 
கிறுக்கு கொண்டு அலையாமல் 
இறுதி வரை உடன் வரும் உறவை 
கொஞ்சம் தேடிக்கொள்..!! 

19 August 2013

கம்ப்யூட்டர் தந்த கனவு தேவதை...!!!

இணையம் தேடலில் 
இடறி விழுந்த 
இதயம் ஒன்று 
இதயம் விட்டு போக மறுக்கிறது..!!! 

17 August 2013

காதலிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை....!!!

அர்த்தராத்திரி , 
அதீத நிலவொளி, 
கண்ணை விரட்டும் தூக்கம், 
இரவுக்கு அடங்காத கனவு, 
அமளி துமளி ஏதுமின்றி 
அனிச்சையாய் கனவில் வந்தாள்..!! 

16 August 2013

செத்தால் மட்டும் தான் சுடுகாடா....????

இசைநிறை வரியென 
இதய வெற்றிடம் நீ சூழ்ந்தால், 
இயல்பு தன்மை நான் மறந்து 
இன்னிசை பாடி இமை திறப்பேன்...!! 

14 August 2013

அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!!

திருமண சந்தையில் 
துண்டு போட்டு பேரம் பேசி, 
தங்கத்திற்கும் பணத்திற்கும் 
ஒப்பந்த முறையில் சாசனம் எழுதி, 
மணமகளை இறக்குமதி செய்கின்றனர்..!! 

13 August 2013

கவிதைக்கும், தலைப்புக்கும் தொடர்பில்லை...!!

அடுத்தடுத்து என்ன நடக்குமென 
அடுத்தவனுக்கு தெரிந்து விட்டால் 
அடுத்து நடப்பதில் பலனில்லை...!! 

சத்தியம் செய்த உண்மைகளெல்லாம், 
சத்தியமாய் நிலைத்து இருக்குமாயின் 
சத்தியம் கூட உலக அதிசயமே..!! 

12 August 2013

பிணம் எரிக்கும் நாளைய பிணங்கள்..!!

மயானம் நோக்கி வருகிறான் 
மரித்துப் போன மனிதன், 
அமைதியை விரும்பாதவனுக்கு 
அந்த மயான அமைதி புதிது தான்..!! 

10 August 2013

கேவலமான தற்கொலைகள்...!!!

யாருக்கும் கிடைத்திடாத 
மனிதப்பிறவியை மாய்த்து, 
யாருக்காகவோ தற்கொலை செய்யும் 
கேவலமான பிறவிகளின் 
ஆன்மா பார்த்து கேட்கிறேன், 

08 August 2013

ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!!

பொத்திப் பொத்தி வளர்த்த மகள், 
பொங்கும் பாசம் வைத்த மகள், 
தாயைப் போல் கண்ட மகள், 
தவிக்க விட்டு போன மகள்..!!! 

07 August 2013

தீண்டத்தகாத கவிதை வரிகள்...!!!

தீயினால் சுட்டதோர் புண்ணை விட 
தீண்டாமையினால் சுட்ட புண் 
காலத்தினும் ஆறாமல் 
நெஞ்சை வருடும் வடுக்களாகவே 
வீதியில் அலைகிறது..!! 

06 August 2013

கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!!

குழலூதும் குரலில் 
குரல்வளை சுருக்கி, 
தெவிட்டாத தேன் பேச்சில் 
அன்பாய் அவள் என்னை அழைத்தால் 
கொஞ்சம் இஷ்டம்...!!! 

05 August 2013

சுனாமியில் தப்பி பிழைத்தவன்..!!!!

திடீரென இதயம் நின்று விட்டது 
யார் காரணமோ..?? 
இதயம் நின்ற காரணம் அறிந்தால் 
காதல் என்ன செய்யுமோ..?? 

03 August 2013

வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!

வாலிப வயதில் இளமை நாணேற்றும், 
முட்டாள் மூளையின் தூண்டல் 
நெருப்பையும் அள்ள வைக்கும், 
நினைப்பவை எல்லாம் 
நிகழ்த்த துடிக்கும், 
நிகழ கூடாத எல்லாம் 
நினைக்கவும் வைக்கும், 
இத்தனை இருந்தும் வாலிபம் 
அர்த்தமில்லா கேள்விகுறி தான்..?? 

02 August 2013

நெற்றிக்கண் திறப்பினும் பசி பசியே...!!!

பச்சை பிள்ளையின் அழுகுரலுக்கும், 
பரிதவிக்கும் தாயின் தவிப்பிற்கும், 
பஞ்சம் போக்க எவனும் வருவானோ 
பசி நீங்க பழைய சோறு தருவானோ..?? 

01 August 2013

எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

ஆண்: 

முதலிலும் முடிவிலும் உன்னை கேட்பேனே, 
இரவிலும் பகலிலும் உன்னை நினைப்பேனே, 
என் கைகள் பற்றி கொள்வாயா...?? 
என் கண்ணில் தினம் வசிப்பாயா..?? 
வாசல் எதிர்பார்த்தே மெலிந்தேன் நான்..!!