www.gamblinginsider.ca

16 August 2013

செத்தால் மட்டும் தான் சுடுகாடா....????

இசைநிறை வரியென 
இதய வெற்றிடம் நீ சூழ்ந்தால், 
இயல்பு தன்மை நான் மறந்து 
இன்னிசை பாடி இமை திறப்பேன்...!! 

ரசாயன மாற்றம் சிறு நொடியில் 
ரசவாதம் என்னுள் சேர்த்து, 
ரசனை மிக்க கவி ஒன்றை 
ரசித்து எழுதி உனக்களிப்பேன்..!! 

நீலக்கதிர் வானமாய் நீ என்னை 
நுகர்வது போல் உணர்ந்து, 
நினைவகம் இழந்த 
குறுந்தகடாய் குறுகி நிற்பேன்..!! 

மிரளச் செய்யும் உன் விழியும் 
உறைய வைக்கும் உன் இதழும், 
மின்சாரமாய் தாக்கினால் 
நடு நடுங்கி தூரம் விழுவேன்..!! 

மேலே சொன்ன வரிகள் எல்லாம் 
காதல் கிறுக்கு பிடித்தவனின் உளறல், 
பெயர் ஒழுங்காய் எழுத தெரியாதவனுக்கு 
காதல் கவிதை ஒரு கேடு..!! 

காதல் வந்தால் கவிதை வருமென 
யாரோ அவனிடம் உளற, 
இவனும் கவிதை எழுத காதல் தேடி 
இவனை தொலைத்தது தான் மிச்சம்.!! 

உலகின் மிகப்பெரிய முட்டாள் 
மனதை அடக்க முடியா மனிதன், 
அலைபாய துடிக்கும் மனதை 
அடக்கி ஆள்பவனே அறிவாளி..!!! 

முன்னோர் சொன்ன வார்த்தை ஒன்று 
செத்தால் மட்டுமே சுடுகாடு, 
தவறிய காதல் தரும் பாடம் ஒன்று 
வாழ்க்கை முழுவதும் சுடுகாடு...!!