www.gamblinginsider.ca

05 August 2016

வாசல் கடக்கிறார்! - Mano Red


மசூதி தெருவின் முனையில் 
பாழடைஞ்ச ஒரு ஐயர் வீடு! 
அந்தத் தெருக்காரர்களும் 
அப்படித்தான் சொல்வார்கள்.
தாசில்தாராகப் பழுத்து
பணி ஓய்வுபெற்று
பணக்கார வாழ்க்கையின்
மொத்த ஜீவனையும்
உதவிகள் செய்தே கழித்தவர்
மனைவி மக்களை
எப்போதோ இழந்திருந்தார்.
"ஊசியின் காதில் ஒட்டகங்கள் நுழைந்தாலும்
செல்வந்தர்கள் மோட்ச வாசலைக் கடக்க முடியாது"
என்ற கிறிஸ்துவின் வாக்கை
பொய்யாக்க
உலக சம்பிரதாயப்படி
ஒருநாள் இறந்துபோனார்!