www.gamblinginsider.ca

11 January 2013

நம்பினால் நம்புங்கள்...!!!


http://eluthu.com/kavithai/100889.html

இருக்கும் போது யாருக்கும் 
தெரியாத அவனே, 
இறந்த பின் தெய்வமாகிறான்...!! 

நமக்கு மிகவும் பிடித்த ஒன்று, 
கிடைக்காத போது 
பிடிக்காத ஒன்றாகி விடுகிறது...!! 

அருவெறுப்பான கவர்ச்சி படத்தை 
மகனும்,தந்தையும் 
ஒரே கோணத்திலே ரசிக்கின்றனர்...!! 

கொலை செய்து சிறை சென்றவன் 
திரும்பி வந்ததும், 
மாபெரும் தலைவனாகிறான்....!!! 

கொடியவன் என சித்தரிக்கப்பட்ட இராவணன் 
கதை நாயகன் ஆனால், 
நல்லவன் ஆகி விடுகிறான்..!! 

ஊர் கூடி செய்து வைத்த திருமணமே 
நன்றாக வாழாத போது, 
ஊர் கூடி சிரித்து பிரிக்கபடுகிறது...!! 

நாம் பார்த்து ரசித்த நடிகர்,நடிகைகள் 
போலவே வாழ ஆசைப்பட்டு, 
ஒருநாள் வாழ்ந்து மறக்கிறோம்...!! 

அவசர உலகில் அறிவை இழந்து, 
காட்சி பொருளை அதிசயம் என நம்பி 
கண்ணிருந்தும் யானை தடவி பார்க்கிறோம்..!! 

நம்பினால் நம்புங்கள், 
உண்மையல்லாத ஒன்றே உயிராகிறது, 
நம் உணர்ச்சிகளின் உச்சகட்டமே 
ஏமாற்றங்களின் பிறப்பிடமாகிறது..!!!