www.gamblinginsider.ca

01 August 2013

எந்த சாமி இவளை அனுப்பி வச்சதோ...???

ஆண்: 

முதலிலும் முடிவிலும் உன்னை கேட்பேனே, 
இரவிலும் பகலிலும் உன்னை நினைப்பேனே, 
என் கைகள் பற்றி கொள்வாயா...?? 
என் கண்ணில் தினம் வசிப்பாயா..?? 
வாசல் எதிர்பார்த்தே மெலிந்தேன் நான்..!! 

பெண்: 
என்னை கேட்க வேண்டாம், 
என்னை நினைக்கவும் வேண்டாம், 
எப்போதோ உன்னை பற்றி கொண்டேன், 
உன் கண்களில் என்னை ஒட்டி கொண்டேன், 
வாசல் பார்க்காதே உன் சுவாசமாய் நான்..!! 

ஆண்: 
அடி உன்னை பார்க்கும் பொழுது 
வானத்துல நிலவும் பொய்யா போனதே,
பெண்: 
நிலா கூட நான் பேசும் போது 
உன் காதல் சொல்லி ரசிக்குதே..!! 
ஆண்: 
ஊர் சொல்லுது உலகம் சொல்லுது 
நம் காதல் பொய்யா..?? 
பெண்: 
யார் என்ன சொன்னாலுமே 
நம் காதல் வெல்லுமே..!! 
ஆண்: 
ஐயோ யார் இவளோ, 
எந்த சாமி எனக்காக அனுப்பி வச்சதோ..!! 


பெண்: 
நீ மட்டும் போதுமே வேறெதுவும் வேண்டாமே, 
உன் உள்ளங்கையில் நானிருந்தால் போதுமே..!! 
ஆண்: 
நீ சொல்ல தேவை இல்லையே, 
என் ரேகை அழித்து உன்னை வரைவேனே..!! 
பெண்: 
என்னை படைச்ச கடவுளும் இப்போ 
பெரிதாய் தெரியவில்லையே..!! 
ஆண்: 
கடவுள் என்ன பெரிய கடவுள் 
உனக்காக நான் இருக்கேனே..!! 
பெண்: 
இது போதும் சாமி 
நான் இப்போதே உயிரை விடுவேனே...!! 
ஆண்: 
உயிரை விட்டு எங்கே செல்வாய் 
போக போவது உன் உயிர் மட்டுமா..??