www.gamblinginsider.ca

13 August 2013

கவிதைக்கும், தலைப்புக்கும் தொடர்பில்லை...!!

அடுத்தடுத்து என்ன நடக்குமென 
அடுத்தவனுக்கு தெரிந்து விட்டால் 
அடுத்து நடப்பதில் பலனில்லை...!! 

சத்தியம் செய்த உண்மைகளெல்லாம், 
சத்தியமாய் நிலைத்து இருக்குமாயின் 
சத்தியம் கூட உலக அதிசயமே..!! 

தொடர்பு இல்லாத நபரிடம் 
தொடர்ந்து தொடர்பில் இருந்தால் 
தொலைத் தொடர்பு கூடி வருகிறது..!! 

சம்பந்தமில்லாத ஒன்றை பற்றி 
சதா காலமும் சம்பந்தப்படுத்தி பேசினால் 
சகல சம்பந்தம் கிடைக்கிறது..!! 

சொன்னால் புரியாத ஒன்றை, 
சொல்லி சொல்லி புரிய வைக்க முடியுமெனில் 
சொன்னால் புரியாத சொல் இல்லாமல் போகும்..!! 

வேண்டாம் என ஒதுக்கப்படும் செயல் 
வேண்டாம் என நினைக்கும் முன்பே 
வேண்டா வெறுப்பாகி விடுகிறது..!! 

ஒன்றுமில்லாத வார்தையொன்று 
ஒன்றின் அர்த்தத்தை குறித்த பின்பே 
ஒன்றுமில்லாமல் போகிறது..!!! 

கவிதைக்கும் தலைப்புக்கும் 
கடுகளவு தொடர்பில்லை என்றாலும் 
கவிதை என்றும் கவிதையாகியே முடியும்..!!