www.gamblinginsider.ca

20 June 2013

யாரடி நீ மோகினி...!!!

கனவுகள் அவளது ஊரானால் 
இரவுகள் எனது முகவரியாகும், 
மௌனம் அவளது மொழியானால் 
அமைதி எனது குரலாகும், 
புன்னகை அவளது சிறப்பானால் 
ரசிப்பது எனது தொழிலாகும்..!! 
அவளிடம் என்னை இழந்துவிட்டேன் 
இருப்பதையும் இழக்க துணிந்து விட்டேன் 
இறுதியில் இருப்பது எதுவோ தெரியாது...?? 

சண்டையென எதுவும் வந்தால் 
அமைதியிலே என்னை கொள்வாள், 
நான் பேச்சை இழந்து நிற்பேன்..!! 
கேட்டவுடன் மறுக்காமல் 
சின்ன காதலினை தந்திடுவாள் 
அவள் முன்னே காதல் தோற்கும்..!! 
கோவத்தில் என்னை அவள் அடித்தால் 
தலை குனிந்து நான் அடி பொறுப்பேன் 
முடிவில் வெல்வது அவள் காதல்..!! 
குழந்தை போலே அவள் இருக்க 
கைபிடித்து நான் நடப்பேன், 
எனக்குள் ஏதோ புது மயக்கம்..!!! 

என்மேல் சந்தேகம் அவள் கொண்டால் 
தயக்கத்திலே என்னை பார்ப்பாள் 
நான் உண்மை சொல்லி விடுவேன்..!! 
சில சமயம் அவள் அழுதால் 
துணையிருக்க நான் அழுவேன், 
என் கண்ணீர் துடைத்து அவளே சிரிப்பாள்..!! 
எனக்கென வாழ்வதே அவள் வாழ்க்கை 
நான் திருப்பி தருவது என் உயிரை, 
இறுதி வரை அவள் என்னுடன் இருப்பாள்..!! 
அவளுக்கும் எனக்கும் இருப்பதுவோ 
ஒற்றை இதயம் மட்டுமே, 
முடிவில் துடிப்பு சத்தம் கூட காதலித்ததே...!!