பெண்மையில்லா பூமிதனை, கற்பனையில் சுற்றி வந்தேன்..!! மையில்லா காகிதம் போல உயிரிழந்து பூமி சுழன்றது..!!
பெண்மையில்லா பூமியில், அன்பின் வாசல் சுத்தமில்லை, வீட்டில் வெளிச்சம் இல்லை, பசி போக்க ஆளில்லை, நலம் விசாரிக்க நாதியில்லை, நிலத்தில் உணவில்லை, வானத்தில் மழையில்லை, மொத்தத்தில் பூமியில் ஒன்றுமில்லை..!!
பெண்மையில்லா பூமியில், கற்பனைக்கு இறக்கை இல்லை, அழகுக்கு ஆரம்பம் இல்லை, காதலுக்கு காதல் இல்லை, அறிவுக்கு அடித்தளம் இல்லை, பாசத்திற்கு பெயர் இல்லை, ஆணுக்கு உயர்வு இல்லை, ஆண்மைக்கு அழகில்லை..!!
மொத்தத்தில் பெண்மை இல்லாத பூமி, உயிர் இருந்தும் உணர்வில்லாத சாமி...!!!