www.gamblinginsider.ca

28 November 2012

ஆற்றில் போடப்படும் தர்மங்கள்...!!!!


http://eluthu.com/kavithai/94625.html

கை கட்டி நிற்பவனுக்கு கோடிகளையும், 
கையேந்தி கேட்டவனுக்கு கோவத்தையும் 
அள்ளி அள்ளி கொடுக்கும் ஆச்சரியமானவர்களே..!! 

ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடுவேன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உள்ளங்களே..!!! 

இறைவனுக்கு 
வறுமை இல்லை, 
பசியும் இல்லை, 
எனவே பணமும் தேவை இல்லை..!! 

ஆற்றில் போடுவதே தவறு-இதில் 
அளந்து தான் போட்டேன் என்று சொன்னால் 
என்னவென்று கருதுவது...???? 

இல்லாதவர்க்கு அள்ளி கொடுங்கள் 
சிவந்த உன் கைகளை காண 
இறைவனும் இறங்கி வருவான்..!!!