www.gamblinginsider.ca

28 November 2012

என்னை விட்டு விடு...!!!


http://eluthu.com/kavithai/94747.html


விழிகளிலே உன் நினைவுகளை, 
புதைப்பது போல் உணருகிறேன். 

உனை மறக்க 
உன் நினைவிழக்க 
இறப்பதற்கு துணிகிறேன். 

வேண்டாம் கொடுமை, 
மின்னலே என்னை விட்டு விடு....!! 

உன்னை நான் வர்ணித்த வரிகளை 
திருப்பி தந்து விடு..., 
என் தேவதையே, 
முன் பனித்துளியே, 
வானவில்லே, 
வால் நட்சத்திரமே..!!! 

என் இதய துடிப்பையும் 
உனக்கு கடன் தருகிறேன் 
என்னை தொலைத்து விடு...!! 

உன்னை விட்டு 
போக துணிந்த எனக்கு, 
நீ தந்த சுவடுகள் 

ஆணியறைந்த இதயம், 
நசுக்கப்பட்ட பூக்கள், 
கண்ணீர் விட்ட கடிதங்கள், 
மரித்துப்போன மணித்துளிகள்...!!! 

நான் போகிறேன் அன்பே 
இரவுகளை தேடி அல்ல, 
நீ இல்லாத பகலை...!!!!