அ முதல் ஓ வரை....!!!!
http://eluthu.com/kavithai/98004.html
அழகிய உன் இதயத்தை
ஆள்வதற்கு தவம் இருக்கிறேன்..!!!
இனியும் ஒருவன் வரப்போவதில்லை
ஈடு இணை எனக்கு எவனுமில்லை..!!
உலகறிய உன்னை தூக்கி செல்கையில்,
ஊர் கூடி வந்தாலும் கவலை இல்லை...!!
எத்திசையில் நீ இருந்தாலும் உன்னை
ஏந்தி செல்ல ஓடோடி வருவேன்..!!!
ஐயம் வேண்டாம் அன்பே,
ஒரு மாறாத உண்மை - என்றும் நாம்
ஓர் உயிராகவே இருக்கிறோம்..!!!