ஈழத்து ஈரக்காற்றே, ஈழத்து ஈரக்காற்றே, என் இன மக்களை பார்த்தாயா..?? உதவி செய்ய நாதியற்று, அக்கறையால் நலம் விசாரிக்கிறேன்..!!
என் மக்களை கொன்ற பாவியின் மேல், எச்சில் உமிழ்ந்தாலும், எட்டி மிதித்தாலும், பாவம் போல் அஞ்சி,நடித்து பதுங்கியவர்கள் நாங்கள்..!!
பூப்பட்டால் கலங்கி விடும் என் மக்களை, கண்ணிவெடிக்கு பலி கொடுத்தும், துப்பாக்கி குண்டுகளில் பொட்டு வைத்தும், ஆடையின்றி அலங்கோலம் செய்தும், வேடிக்கை பார்த்த வேலி ஓணான்களை, கல்லெறிந்து துரத்த முடியாத கையாலாகதவர்கள் நாங்கள்..!!
நாங்கள் பதுங்கியது போதும், ஓடி ஒழிந்தது போதும், அடி வாங்கியதும் போதும், ரத்தம் சிந்தியதும் போதும், மிச்சமுள்ள உயிர் காக்க, அச்சமின்றி வருகிறோம்..!! ஈழத்து ஈரக்காற்றே, ஈழத்து ஈரக்காற்றே,
வீழத் தெரிந்த எங்களுக்கு, வீழ்த்தவும் தெரியும்..!! காத்திருங்கள்..!!