www.gamblinginsider.ca

01 April 2013

காதல் செய்யும் புதுவித வன்முறை...!!!


காதலை மறைப்பது பாவம், 
சொல்லாமல் கொல்வது அநியாயம், 
இது மகரந்த பூவின் வாசம், 
என் இதயம் அழிக்கும் சுவாசம்...!! 
ஒரு புதுவித செய்முறையே, 
காற்றை நிறுத்தினேன் 
அதன் மூச்சை அடக்கினேன் 
உயிர் விட்டது காற்றல்லவா..!!! 

ஏன் என்று சொல்லாமல் 
உயிர் போ என்று சொன்னாயே..!! 
மான் போல வர்ணித்தேன் 
எனை விட்டு எங்கோ சென்றாயே..!! 
தேன் போல வார்த்தைகள் 
எனை தின்று சூதால் கவ்வியதே..!! 
ஐம்புலனும் அடங்கியதே 
அடங்கியதும் தொலைந்ததுவே..!! 
உயிர் முழுதும் உன் மாற்றம் 
எனக்கு அளித்தாய் பெரும் ஏமாற்றம்..!! 

நான் இல்லை என்றாலே 
நீயும் இல்லை என்றாயே..!! 
உடல் என்னை விட்டாலும் 
உயிராய் இருப்பேன் என்றாயே..!! 
நிழல் பிரிந்த நொடிகளிலும் 
என் நிழலாய் வருவேன் என்றாயே..!! 
சூரியன் உதிக்கிறதே, 
பனித்துளிகள் இறக்கிறதே..!! 
என்னுள் சொல்ல முடியா ஏக்கம் 
நீ போன பின்னே பெரும் துக்கம்..!! 

இது புதுவித வன்முறையே, 
காதல் வந்த பின்பு 
உயிரை விட்டு இதயம் அறுப்பது..!!!

No comments: