www.gamblinginsider.ca

15 June 2013

தந்தையர் தினம்....!!!!

தன்னைப் பற்றி எதுவும் யோசிக்காமல் 
குடும்பத்திற்காகவும், 
குழந்தைகளுக்காகவும், 
வியர்வையும் ரத்தமும் 
சிந்தி உழைக்கும், 
அபூர்வ மனிதனே தந்தை...!! 

மார்பில் எட்டி மிதிக்கும் போதும் 
தோளில் சுமக்கும் போதும், 
அடம் பிடிக்கும் போதும், 
நமக்கு பிடித்த ஒருவர் 
தந்தை மட்டுமே..!! 

எத்தனை கோவம் அவர் மேல் 
தினமும் இருந்தாலும், 
அவரின் பாச அரவணைப்பில் 
எல்லாம் பறந்து போகும்..!! 

நமக்கென என்ன நடந்தாலும் 
தந்தை வெளியில் அழுவதை யாரும் 
பார்த்திருக்க முடியாது..!! 
ஆனால் அவரின் உள் மனம் 
அழுவது போல் யாராலும் இனி 
அழுதிட முடியாது...!! 

எத்தனை பேருக்கு தெரியும், 
பிள்ளைகள் மனதில் நினைப்பதை 
தந்தை தானாக உணர்ந்து கொள்வார் என்று...!! 

நம் ஆசைகளை கனவில் கூட வராத கடவுள் 
நிறைவேற்றுவரோ இல்லையோ...?? 
ஆனால் நிச்சயம் கண்முன் காட்சி தரும் 
நம் தந்தை நிறைவேற்றுவார்..!! 
அதற்காக அவரை 
கடவுள் என சொல்லவில்லை, 
அதற்கும் மேலாகவே நான் சொல்கிறேன்..!! 

வாழ்நாள் முழுவதும் நமக்காக 
வாழும் தந்தைக்கு, 
நாம் கொண்டாடும் ஒரே நாள் 
தந்தையர் தினம் மட்டுமே...!!!