www.gamblinginsider.ca

01 October 2013

இது ஹைக்கூ கவிதைகளா...???

இரக்கமில்லாமல் நீ எத்தனை முறை 
ஒப்பனை செய்து கொண்டாலும், 
பாழாய்ப் போன கண்ணாடிக்கு 
பொறாமையும்,ஏமாற்றமுமே மிச்சம்..!! 

யாருக்கு தெரியும்..? 
நீ கோலம் தான் போடுகிறாயா, 
இல்லை, 
புதியதொரு உலகம் படைக்கிறாயா என்று..!! 

நீ கண்களை மூடிக் கொண்டால் 
எல்லாம் சரியாகி விடுமா..?? 
மரியாதையாக சொல் 
உனக்கும் பூக்களுக்கும் 
என்ன தொடர்பு..?? 

இதெல்லாம் உனக்கே கொஞ்சம் 
அதிகமாக தெரியவில்லை...!! 
இன்னும் அழகு வேண்டுமென 
காகிதப் பூக்களை மிரட்டி கேட்கிறாய்...!! 

அடியே கிறுக்கி, 
எங்காவது ஓடி மறைந்து விடு, 
உன்னைத் தேடி ஆயிரம் தேவதைகளும், 
சில நூறு நிலவுகளும் வாசலில் நிற்கின்றன..!! 

அடிக்கடி உன் அழகைப் பற்றி 
என்னிடம் சொல்லாதே, 
எத்தனை நாளுக்கு தான் 
நானும் நல்லவன் போல் நடிக்க முடியும்..!! 

அய்யய்யோ, 
உனக்கு கோவம் வரும் அளவிற்கு 
நான் ஒன்றும் செய்யவில்லையே..!! 
வெறும் கவிதை தானே 
உன்னை வைத்து எழுதினேன்..!! 

ரசித்து வாசிக்கப் போகும் 
உனக்கு மட்டுமே தெரியும், 
இந்த ஹைக்கூ கவிதைகள் படிப்பதற்கா..?? 
இல்லை கழுதைகள் தின்பதற்கா...??