பகலில் மட்டும் வருகின்ற
பகல் கனவு அவள்தானே,
கொலையின்றி
உயிர் மட்டும்
அப்படியே தின்கிறாள்....!!
நிஜங்களுக்குள் நிழலாக
நிற்பவளும் அவள்தானே,
வெயிலிலும்
விரும்பியே
நட்சத்திரம் கேட்கிறாள்..!
பார்த்தவுடன் பிடிக்கின்ற
குறுங்கவிதை அவள்தானே,
விழிகளில்
வரிகளை
மறைத்து வைக்கிறாள்...!!
தொட்டவுடன் சிலிர்க்க செய்யும்
பனிக்கட்டி அவள்தானே,
இதழ் அசைவில்
பதில் தந்து
உறைய வைக்கிறாள்...!!
நெஞ்சுக்குள்ளே கேட்கின்ற
இதய சத்தம் அவள்தானே,
எனக்குள்ளே
ஏதோ ஒன்றை
தினம் தேடச் சொல்கிறாள்...!!
சினுங்கலிலே சிறுபார்வை,
நெற்றி மேலே துளி வியர்வை,
கண்ணை சுருக்கி,
கூந்தல் ஒதுக்கி,
அழகுக்கு
ஆணவம் தருகிறாள்..!!