எழுதி வைக்க
தேவையில்லை,
பிறந்தவுடனே
நம் உயிரை வாங்க
மரணம் நம்மை நோக்கி
கிளம்பியிருக்கும்...!!
பிறக்க நமக்கு உரிமை
இல்லாத போது,
இறக்க மட்டும்
உரிமை யார் தந்தது..??
இறப்பதற்கு ஆயிரம்
காரணம் இருந்தால் போதுமா..??
நியாயம் வேண்டாமா..??
இறக்க என்ன
தர்ம நியாயம் வேண்டும்..!!
மனம் தரும்
மரணம் என்பது
தற்கொலை,
ரணம் தரும்
மரணம் என்பது
கௌரவ கொலை..!!
உயில் எழுதி விட்டு
வெறும் எலும்பாக இறப்பது
ஒரு வகையெனில்,
உடல் எழுதி வைத்து
இறந்தாலும் உயிரோடு இருப்பது
ஒரு உயர் வகை தானே..??
தீராத வியாதியினால்
தீர்ந்து போன உயிர் கொண்டு
தினம் தினம் வாழ்ந்து
இறப்பதை விட,
இறக்க வேண்டுமென
அனுமதி கேட்டு இறப்பது மேல்..!!
கௌரவக் கொலை செய்ய
எந்த சாட்சியும் வேண்டாம்
மனசாட்சி போதும்,
வேசமில்லாத
உண்மை பாசத்திற்கு தெரியும்
கொலை எது..?
கருணைக் கொலை எதுவென்று..!!