தாளில் வரையப்பட்ட
பூனை,
வெள்ளைத்தாளை
பாலாய் நினைத்து
குடித்ததை
ஒத்திருந்தது
அறிவிலி மனம்…!!
இல்லாத ஒன்றை
இருப்பதாய்
நினைத்து,
வீதியில்
சென்ற விதியை
பாதியில்
இடைமறித்து
ஊதியே பெரிதாக்கியிருந்தது..!!
தடங்கலின்றி
பாய்வதற்கான
தட்பவெப்ப
நுட்பமெல்லாம்
மாறிப் போயிருந்தது,
விட்டத்தை
பார்த்ததில்
தொட்டதும்
கைவிட்டிருந்தது..!!
வெற்றி பெறா
நிலையின்
வெறுமையைக்
குறிக்கும்
வெற்றிடமும்,
அதன் பெயரை
தக்கவைக்க
வெற்றிடமாகவே
வெற்றி பெற்றிருந்தது…!!
முன்னேற விடாத
செயல் தடுப்புகள்
எல்லாம்
விடுப்பில்
செல்லாமல்,
கடுப்புகளை
தின்று தீர்க்க
இடுப்பிலேயே
அமர்ந்திருந்தது..!!
முடிவு செய்யப்பெறாத,
மனவுறுதி
கொள்ளாத,
தீர்மானிக்கப்பெறாத,
ஐயப்பாடுள்ள,
ஒருநிலைப்பெறாத,
ஊசலாடித்
தயங்குகிற
செயல் அனைத்தும்
பிணங்களின்
மீளா தூக்கம் போல்
மீண்டும்
எழுப்ப முடியாதிருந்தது…!!!