www.gamblinginsider.ca

23 October 2017

ஞாயிறு உளறல் 12 - Mano Red


அது ஒரு மங்கலான மாலைப்பொழுது. அதாவது வெயில் மறைந்தும் மறையாமலும், இருள் வந்தும் வராமலும் இருக்கிற ஆஃபாயில்தனமான நேரம். பெண் ஒருத்தி (வயது முக்கியமில்லை) மெடிக்கல் ஷாப்க்கு வந்திருந்தாள். அந்தக் கடைக்கு அவர் வாடிக்கையாளர் என்பது இருவரது பார்வையிலும் தெரிந்தது. அதனால்தான் வரிசை நாகரிகம் தெரியாமல் முன்னால் காத்திருப்பவர்கள் பற்றிய கவலையின்றி வந்தவுடன் அவரும் கேட்க, கேட்ட உடன் மருந்துக் கடைக்காரரும் எடுத்துக் கொடுக்க அருகில் யாரோ பல் கடிக்கும் சத்தம் கேட்டது. (இதுவே குழாயடியாகவோ, ரேஷன் கடையாகவோ இருந்திருந்தால் நடக்கிற கதையே வேறு)
காய்ச்சல் என நினைக்கிறேன். இருமிக் கொண்டும், மூக்கை உறிஞ்சி ஒரு விரலால் மூக்கை இழுவியபடியும் மருந்து கேட்டாள். மருந்துக் கடைக்காரனும் ரொம்ப வேகமாக மாத்திரையை வெட்டி எடுத்து கவரில் போட்டு கொடுத்தான். இதற்கிடையில் அவள் தன்னுடைய எடையை மிஷினில் சரிபார்த்துக் கொண்டாள். அவளை அனுப்பி விடுவதில் ரொம்ப வேகமாக கடைக்காரன் செயல்பட்டது அனிச்சையாக இருந்தது.
போன வேகத்தில் திரும்பி வந்த அவள் "என்ன மாத்திரை இது? புதுசா எதயோ கொடுத்து என்னையக் கொல்ல பாக்குறீங்களா?" என்று ஏளனத்துடன் கத்த, மாத்திரைகளை வாங்கிப் பார்த்த கடைக்காரருக்கு என் ஞாபகம் வந்தது.
"இவ்வளவு நேரம் இவன் ஏன் அங்க சும்மா நிக்கிறான்" னு உங்களுக்கு சந்தேகம் வந்திருக்குமே? எனக்கும் வந்துச்சு. நான் கேட்ட மாத்திரைகளை தேடிக் கொண்டிருந்த இடைவெளியில் அவள் வந்ததால் என்னை ஓரம்கட்டிவிட்டார்கள். நானும் பெருந்தன்மையாக விலகிக் கொண்டேன். நடுவில் பல்லைக் கடித்த சத்தம் கேட்டிருக்குமே அது நான்தான். எனக்கான மாத்திரைகளைத்தான் அவளிடம் கொடுத்துவிட்டு திட்டு வாங்கினார். இப்போது சரியான மாத்திரைகளைக் கொடுத்து அவளை அனுப்பிவிட்டு சோகமே உருவாக எனக்கு மாத்திரைகள் கொடுத்தார்.
"யோவ்... மளிகைக் கடைக்காரன் பொறுப்பில்லாம இருக்கலாம் ஆனா மருந்துக் கடைக்காரன் பொறுப்பில்லாம இருக்கலாமா? ஏன்னா உயிர் ஒண்ணும் --- இல்ல"😎 (பெரிய Punchஆ இருக்கோ?)
Mano Red / 22.10.17